எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. ஜன.27 - குற்றாலம் அருகே நேற்று அதிகாலையில் கார் மரத்தில் மோதியதில் 2 டாக்டர்கள் உட்பட 3 பேர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 2 டாக்டர்கள் உட்பட 3 பேர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜபாளையம் தேவதானம் காமராஜர் காலணியில் வசித்து வருபவர் டாக்டர் ரகுகுமரன்(வயது 29) இவர் முன்னாள் ராஜபாலையம் அதிமுக எம்.எல்.ஏ. தனுஷ்கோடியின் மகன் ஆவார் . இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் மதுரை எழில்நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் கார்த்திக் (வயது28) போடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் டாக்டர் தினேஷ் (வயது 28) ராஜபாளையம் பஜனைமடத்தெரு பகுதியை சேர்ந்த சங்கரகிருஷ்ணராஜா என்பவரது மகன் டாக்டர் ரகு(வயது 28) மற்றும் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பிள்ளையார் என்பவரது மகன் கேஸ் கம்பெனி வாட்ச்மேன் சின்னச்சாமி (வயது 40) ஆகியோருடன் தென்காசியில் நேற்று நடைபெறும் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள குற்றாலம் வந்துள்ளார்கள். அதிகாலை 3 மணி அளவில் தனது காரில் இவர்கள் அனைவரும் குற்றாலத்திலிருந்து பழைய குற்றாலம் சென்றுள்ளார்கள். அப்போது அந்த காரை குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் வேலு என்பவரது மகன் இசக்கிமுத்து (வயது 29) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த கார் பழையகுற்றாலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்ற மரத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் நிலைகுலைந்த அந்த காரில் இருந்த டாக்டர்கள் ரகுகுமரன் (வயது29) டாக்டர் கார்த்திக் (வயது 28), வாட்ச்மேன் சின்னச்சாமி (வயது40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அதே காரில் இருந்த டாக்டர் தினேஷ்
(வயது 28) டாக்டர் ரகு(வயது 28) மற்றும் கார் டிரைவர் இசக்கிமுத்து (வயது 29) ஆகிய 3 பேர்களும் பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்கள். இந்த விபத்து பற்றி தகவலறிந்த குற்றாலம் போலீஸார் விரைந்து வந்து பலத்த காயம் அடைந்த 3 பேர்களையும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின் விபத்தில் இறந்த டாக்டர் ரகுகுமரன், டாக்டர் கார்த்திக், வாட்ச்மேன் சின்னச்சாமி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின் உடலை அவர்களது உறவினர்களிடம்
ஒப்படைத்தனர். இந்த விபத்து பற்றி குற்றாலம் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசுக்கு எதிர்ப்பு
29 Dec 2025டெல்லி, தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்திய டெல்லி அரசின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
-
7 லட்சம் மாணவிகளுக்கு உதவித்தொகை மற்றும் பல்வேறு திட்டங்களால்: தமிழகத்தில் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு:
29 Dec 2025திருப்பூர் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் உடல் கருகி பலி - பலர் காயம்
29 Dec 2025மணிலா, இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மெக்சிகோவில் ரயில் விபத்து: 13 பேர் பலி
29 Dec 2025ஒக்ஸாகா, தெற்கு மெக்சிகோவில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் பலியாகினர்.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



