ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால் பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் Nathan Paulin. இவருக்கு உயரத்தில் கயிறு கட்டி நடப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி அத்தனை விருப்பம். சிலருக்கு தரையில் நடப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வந்து விடும். ஆனால் மனுசன் எத்தனை உயரத்திலும் ஒரு ஒல்லியான கயிறை கட்டிக் கொண்டு சாதாரணமாக நடந்து சென்று விடுகிறார். இவர் ஏற்கனவே ஈபிள் டவர் உள்ளிட்ட பல்வேறு உயரமான இடங்களில் கயிறு கட்டி நடந்தவர். தற்போது ரியோடி ஜெனிரோவில் உள்ள பாபிலோனியா மலைக்கும் உர்கா மலைக்கும் இடையே கயிறு கட்டி அசால்ட்டாக நடந்து சென்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது. இரண்டுக்கும் இடையிலான தொலைவு 500 மீட்டர். உயரம் 264 அடி அதாவது 80 மீட்டர். மேலேயிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது. மனுசன் அதற்கெல்லாம் அசந்த ஆள் இல்லை. ஜாலியாக நடந்து மலையை கடந்து விட்டார்.
வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலம், வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இதன் மூல் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஃபேஸ்புக் நிறுவனம், அதிகம் விவாதிக்கப்பட்டது குறித்து வெளியிட்டு வருகிறது. இதில் 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் அதிகம் விவாதிக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவில் தீபாவளி முதலிடம் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் அமெரிக்க அதிபர் அரசியல் குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முகமது அலி, போக்கிமான் கோ ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிரிக்கெட், உரி தாக்குதல், தோனி திரைப்படம், ஹார்டுவெல், பிரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போகிமான் கோ, பதான்கோர்ட் மற்றும் ஐபோன் 7 ஆகியவை முதல் 10 இடத்தில் உள்ளன.
1616 இல் வில்லியம் ஹார்வி என்பவர்தான் விலங்குகளின் உடலில் ரத்தம் பாய்கிறது என்பதை கண்டறிந்தார். 1665 இல் ரிச்சர்ட் லோவர் என்பவர் ஒரு நாயின் உடலிலிருந்து ரத்தத்தை மற்ற நாய்க்கு வெற்றிகரமாக மாற்றி உயிர் பிழைக்க செய்தார். 1667 இல் பிரான்ஸில்தான் மனித உடலில் ஒரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை ஏற்றி பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1668 இல் ரத்தம் தொடர்பான ஆய்வுகளுக்கு போப் தடைவிதித்தார். 1818 இல் ஒருவரின் ரத்தத்தை மற்றவருக்கு ஏற்றி வெற்றி கண்டார் மருத்துவர் ஜேம்ஸ் புளூன்ட். 1874 இல் ஒருவரின் ரத்தத்தையே சேமித்து அவருக்கே ஏற்றும் முறையை வில்லியம் ஹைமோர் என்பவர் முதன்முறையாக சோதித்து வெற்றி பெற்றார். கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் என்பவர்தான் யாருடைய ரத்தத்தையும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்ற இயலாது என்பதை நிரூபித்தார். பின்னர் 1900 இல் அவர் பரிசோதனையில்தான் ஏ,பி, ஓ வகை ரத்தங்கள் கண்டறியப்பட்டன. இதுதான் ரத்த பரிசோதனையின் மிகப் பெரிய திறப்பாக அமைந்தது. மருத்துவர் ஹூஸ்டன்தான் சோடியம் சிட்ரேட்டை பயன்படுத்தி ரத்தம் உறைதலை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போரின் போது பால் பாட்டில்களை சுத்தம் செய்து அதில் ரத்தத்தை அடைத்து வீரர்களுக்கு ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்பட்டன. உலகின் முதல் நடமாடும் ரத்த வங்கி ஸ்பானிய உள்நாட்டு போரின் போது 1930களில் அமைக்கப்பட்டது. முதல் ரத்த வங்கி அமெரிக்காவில் 1937 இல் மார்ச் 15 ஆம் தேதி சிகாகோ கூக் கவுன்டி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல் ரத்த வங்கி 1939 இல் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
பூமிப்பந்தின் தென்கோடியில் அமைந்துள்ள அண்டார்டிகா முழுவதும் பனிப்பாறைகளைக் கொண்ட கடல் ஆகும். கிரீன்ஹவுஸ் வாயுக்களாலும், வெப்பமயமாகும் கடலாலும் காலநிலை மாற்றம் ஏற்பட்டு துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், மேற்கு அண்டார்டிகாவில் 91 புதிய எரிமலைகள் இருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மூலம் எப்போது வேண்டுமானாலும் பனிப்பாறைகளுக்கு பாதிப்பு வரலாம். இதனால் பனி உருகி கடல் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது. இது உலகிற்கு மிக முக்கியமான எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. மேலும், இந்த நூற்றாண்டு பூமியின் தென் துருவத்திற்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வருவதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Dec 2025- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலி நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
16 Dec 2025



