சயின்ஸ் பிக்சன் எனப்படும் அறிவியல் புனைகதைகள் அல்லது அறிவியல் புனைவு படங்கள் என்பவை அறிவியலின் மாயாஜாலத்தை காட்டுவது போல சித்தரிக்கும். ஓரிடத்தில் நடப்பதை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தெரிந்து கொள்வது போன்ற விதவிதமான டிவைஸ்களை காண்பிப்பார்கள்.இது போன்ற கருவிகள் ரியல் வாழ்க்கையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பது பொது மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தற்போது அதை நனவாக்கும் வகையில், இதற்கு ஓர் உதாரணமாக போலந்து லிதுவேனியா நாடுகளுக்கு இடையே மக்கள் சம காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான ஒரு ரியல் டைம் வீடியோ போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளது. லிதுவேனியாவில் உள்ள விலினியஸ் மற்றும் போலந்து நாட்டில் உள்ள லுப்ளின் நகர மக்கள் ரியல் டைம்மில் நேரடியாக சந்தித்துக் கொள்ள வசதி செய்யும் வகையில் இந்த மிகப் பெரிய வீடியோ போர்ட்டல் அமைக்கப்பட்டுள்ளது.இங்கிருந்து ஒருவர் அதன் மூலம் மற்ற நகரத்திலிருக்கும் நபரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். ஏறக்குறைய சயின்ஸ் பிக்சன், மாயாஜால படங்களில் வருவதைப் போல மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது. Benediktas Gylys Foundation என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இந்த போர்ட்டல் நிறுவப்பட்டுள்ளதாக அதன் தலைவர் Benediktas Gylys தெரிவித்தார். மேலும் இந்த போர்ட்டல் மூலம் மக்களிடையே ஒற்றுமை, நல்லுறவு போன்றவை வளர்ந்து கடந்த கால கசப்புகள் மறைய உதவும் என்றார்.அதே போல பெருந்தொற்று காலத்தில் நம்மிடம் அறுந்து போன உறவுகளின் பாலங்களை மீண்டும் இணைக்க இந்த போர்ட்டல் உதவுவதுடன் சர்வதேச அளவிலான நாடுகளுடன் ஒத்துழைப்பு, நல்லுறவு, அண்டை நாடுகளுடன் நட்புறவு போன்றவை மேம்படும் என போலந்து அமைச்சர்Krzysztof Stanowski தெரிவித்தார்.ஹாரி பாட்டர் பாணியிலான இந்த அமைப்பானது தலா சுமார் 11 டன் எடை கொண்டதாகும். இதன் பராமரிப்பு பகுதியளவில் லிதுவேனியன் மற்றும் போலந்து உள்ளாட்சிகளின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் Reykjavik மற்றும் London போன்ற நகரங்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆக்டோபஸ் என்ற உயிரனத்தை நாம் அறிவோம். ஆனால் அதன் உடலில் சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை அறிவோமா.. எல்லா உயிரினங்களுக்கும் 1 இதயம்தான் இருக்கும். ஆனால் ஆக்டோபஸ்ஸூக்கு 3 இதயங்கள். அவற்றில் 2 உடலின் செல்களுக்கு ரத்த ஓட்டத்தை சப்ளை செய்ய, மற்றொன்று உடல் உறுப்புகளுக்கு சப்ளை செய்கிறது. ஆக்டோபஸ் நீந்தும் போது இதயம் துடிப்பதில்லை என்பது கூடுதல் சுவாரசியம். அதே போல 9 மூளைகள் உள்ளன. அதில் பிரதானமான மூளை கணிப்பதற்கும், முடிவெடுப்பதற்குமான வேலையை செய்கிறது. மற்ற 8 மூளைகளும் அதன் ஒவ்வொரு கரங்களுக்கும் அடியில் அமைந்து செயல்பாடுகளை மேற்கொள்கிறது. அதே போல நாம் உள்பட பெரும்பாலான விலங்குகளின் ரத்தம் எல்லாம் சிவப்பாக இருக்கும் போது ஆக்டோபஸ்ஸின் ரத்தம் நீல நிறமானது. நமது ரத்தத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட ஹீமோகுளோபின் செல்களுக்கு ஆக்ஸிசனை கொண்டு செல்லும் வேலையை செய்கிறது. இதே வேலையை ஆக்டோபஸ்ஸில் காப்பரை அடிப்படையாகக் கொண்ட கியனோகுளோபின் அந்த வேலையை செய்கிறது.
இந்திய சுதந்திர போரின் போது மைசூர் சமஸ்தானத்து மன்னர்களான ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் படைகள் 1780 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் படைகளை ஓட ஓட விரட்டியடித்தனர். பொள்ளிலூர் என்ற இடத்தில் இந்த சண்டை நடைபெற்றது. இந்த வெற்றியை குறிப்பிடும் வகையில் பொள்ளிலூர் சண்டை என்ற தலைப்பில் சுமார் 32 அடி நீளமுள்ள 10 மிகப் பெரிய காகிதங்களில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் ஓவியமாக தீட்டப்பட்டது. இந்த ஓவியம் லண்டனில் புதன் கிழமை ஏலத்துக்கு வந்தது. அப்போது 630000 பவுன்ட்ஸ் அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.32 கோடிக்கு விற்பனையானது.
பிரமிடுகள் என்றாலே நமக்கு நினைவக்கு வருவது எகிப்துதான். பிரமிடுகளும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மி எனப்படும் பழங்கால சடலங்களும் உலகம் முழுவதும் வியப்பை ஏற்படுத்துபவையாகும். ஆனால் உலகிலேயே அதிகமாக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து என்று நீங்கள் நினைப்பீர்களேயானால்.. அது முற்றிலும் தவறு. அதிகமான பிரமிடுகள் உள்ள நாடு சூடான் தான். எகிப்து நாட்டில் 138 பிரமிடுகள் உள்ளன என்றால் சூடானில் 244 பிரமிடுகள் உள்ளன. சூடான் நாடு நைல் நதி நாகரிகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான நாடாகும். கிபி 1070 தொடங்கி கிமு 350 வரையிலும் குஷார்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர்கள்தான் சூடானில் பிரமிடுகளை உருவாக்கினர். எகிப்து பிரமிடுகளின் உயரம் சுமார் 400 அடி என்றால் சூடானில் அவை சுமார் 100 அடி கொண்டவையாக அமைக்கப்பட்டிருந்தன.
சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகளால் கழுத்து சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை போக்க, அன்னாசி பழ சாறை கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். மேலும், முட்டைக்கோஸ் சாறு, தக்காளி பழ சாறு, ஆலிவ் எண்ணெயை கொண்டும் கழுத்து சுருக்கத்தை போக்கலாம்.
நாம் பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன்களில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் உயிர் வாழ்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மத்திய அரசின் தேசிய செல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் திரையில் 3 விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இலக்கியத்தில் இதுவரை இல்லாத 2 வித பாக்டீரியா, பூஞ்சை (ஃபங்கஸ்) இருப்பது பயோடெக்னாலஜி துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இது போன்ற கிருமிகளில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் போது அவற்றை ஆஃப் செய்து வைக்க வேண்டுமாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அதிகமுறை தொடர் நாயகன் விருது: விராட் கோலி முதலிடம்
07 Dec 2025மும்பை, சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்
07 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனி தெரியும்: செங்கோட்டையன்
07 Dec 2025ஈரோடு, கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் என்று த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 900 ஆனது
07 Dec 2025ஜகர்தா, சென்யார் புயலால் இந்தோனேசியாவில் பலியானோர் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
ரோகித், கோலி அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம்: பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தகவல்
07 Dec 2025மும்பை, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியம் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
-
ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மொத்தம் 950 மீட்டர் நீளம் கொண்ட, ரூ.150.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ போப் லியோ பங்கேற்பு
07 Dec 2025ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


