முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தலைபாரம் குணமாக மற்றும் நீர் கோவை தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-1

தலைபாரம் ;-- வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.

தலைபாரம் நீரேற்றம் தீர ;-- தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.

தலைபாரம் குணமாக ;-- விரலி மஞ்சளில்  விளக்கெண்ணெய் கலந்த திரி விளக்கில் காட்டினால் புகை வரும் இந்த புகையை இழுக்க வேண்டும்.

தலை பிடிப்பு தீர ;-- கொடிவேலி பட்டையை அரைத்து பாலில் 21 நாட்கள் குடிக்கலாம்.

நீர் கோவை தீர ;-- நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர் கோவை தீரும்.

மூக்கடைப்பு,தலைபாரம் தீர ;-- சுண்டை வேர்,தும்பை வேர்,இலுப்பை பிண்ணாக்கு ஆகியவற்றை பொடியாக்கி சேர்த்து துணியில் கட்டி நுகர மூக்கடைப்பு தலை பாரம் தீரும்.

தலைபாரம்,நீர் வடிதல் குணமாக ;-- சிறு தேட் கொடுக்கு இலை சாறுடன் நல்லெண்ணை சம அளவு கலந்து காய்ச்சி உடல் மற்றும் தலைக்கு தேய்த்து குளிக்க குணமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்