முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தொண்டை கரகரப்பு | நாக்கு புண் | சுவாச குழாய் அலர்ஜி | தொண்டைக்கட்டு | கமறல் | வரட்டு இருமல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்

                          -

தொண்டை புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக ;-- இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர குணமாகும்.

குரல் கம்மல் தீர ;-- மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

நாக்குபுண் குணமாக ;-- கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம் வாய் உதடு ரணம் 1 வாரத்தில் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய ;-- கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும்,ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

இருமல் தொண்டை வலி குணமாக ;-- மிளகு,திப்பிலி,சுக்கு  சம அளவு எடுத்து பொடி செய்து 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிடலாம்.

தொண்டைபுண் குணமாக ;-- வேப்பம்பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண் ஆறும்.

சுவாச குழாய் அலர்ஜி குணமாக ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட் கொள்ள குணமாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக ;-- சுக்கு,மிளகு,திப்பிலி.ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூளாக்கி ஒரு சிட்டிகை பால் அல்லது தேனில் சாப்பிட குணமாகும்.

தொண்டைக்கட்டு,கமறல் குணமாக ;-- மா இலை,பச்சை இலையை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும்.

தொண்டை ரணம் தீர ;-- மாதுளம்பூவை உலர்த்தி சுடுநீரில் காய்ச்சி வை கொப்பளிக்கலாம்.

தொண்டைப்புண்;-- கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்கலாம்.

தொண்டைவலி குணமாக ;-- விளக்கெண்ணெய்யும்,சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர குணமாகும்.

வரட்டு இருமல் குணமாக ;-- எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகலாம்.

இருமல் உடனே நிற்க ;-- முற்றிய வெண்டைக்காய்யை சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும்.

தொண்டை வலி குணமாக ;-- உப்பு நீரை வாயில் வைத்து தொண்டைவரை படும்படி வாய்கொப்பளித்து வரலாம்.

தொண்டை கரகரப்பு,இருமல்,மூலம்,நரம்பு தளர்ச்சி தீர ;-- அதிமதுரப் பொடியை 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

தொண்டை வீக்கம் நீங்க ;-- கொத்தமல்லி இலை,சரக்கொன்றை இலை,புளி சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் நீங்கும்.

குரல் வளம் பெறுக ;-- வாதுமை பருப்பு,ஏலம்,சுக்கு,கற்கண்டு,அதிமதுரம்,குங்குமப்பூ,உலர்திராட்சை,ஜாதிக்காய்,ஜாதிபத்ரி,கிராம்பு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர குரல் இனிமையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்