முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சரும நோய் குணமாக சில சித்த மருத்துவ குறிப்புக்கள்

Image Unavailable

 

அக்கூல் பகுதி ;--  தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணி கொண்டு துடைக்க வேண்டும்.

சீலைபேன் ஒழிய ;-நாய் துளசி இலையுடன்,வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.

படர் தாமரை தீர ;--  சந்தனகட்டையை எலுமிச்சைச்சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.

படர் தாமரை குணமடைய ;-பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர ;--  துளசி இலையை அரைத்து பூசிக் குளிக்க வேண்டும்.

தேமல் சரியாக ;-- கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வரலாம்.

சரும நோய் ;--  மஞ்சள்,வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்.

தேமல் படை குணமாக ;--  நாயுருவி இலை சாறை தடவி வரலாம் .

செரியாமை,தோல் நோய்கள் தீர ;-நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்.

உடல் நாற்றம் நீங்க ;-- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்.

தோல்வலி நீங்க ;-- மாதுளம்,அன்னாச்சி,திராட்சை,எலுமிச்சை, நெல்லிக்கனி சாப்பிடலாம்.

தேமல் குணமாக ;-- வெள்ளைப்பூடை வெற்றிலை சேர்த்து நன்கு அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம்.

சொறி,சிரங்கு குணமாக ;-- அறுகம்புல் தைலம் தேய்த்து குளித்து வரலாம்.

வேர்குரு ;-- சாதம் வடித்த கஞ்சியை உடலில் தடவி சிறிது நெரம் கழித்து குளிக்கலாம்.

புண் சிரங்கு தீர ;--  நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண் சிரங்கு தீரும்.

கரும்படை;-- ஜாதிக்காய்யை அரைத்து தடவலாம்.

சிரட்டை தைலம் ;-- தோல் வியாதிக்கு அருமையான மருந்து.

உடல் வீக்கம் தோல் நோய் குணமாக ;-- தக்காளிக்காய்யை சாப்பிடலாம்.

சொறி,சிரங்கு ,படை தீர ;-- நில ஆவரை கியாழத்தை தடவி வரலாம்.

சொறி,சிரங்கு தீர ;--  கோன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.

சொறி,சிரங்கு ,படை ஆற ;-- நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்.

கரப்பான் கிரந்தி குணமாக ;-- ஆடாதொடை இலை,சங்கன் இலையை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்