முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்.

  1. சர்க்கரை வியாதி  என்பது நோய் கிடையாது,ஒரு குறைபாடு தான்.
  2. கணையத்தை பாதுகாத்தல் சர்க்கரை குறைபாட்டில் இருந்து தப்ப முடியும்.
  3. இரவு அசைவ உணவு,மற்றும் துரித உணவுகளை,உண்பதால் கணையம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் வர வழி வகை செய்கிறது,
  4. உடல் பருமன்,மற்றும் உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் என்பது உண்மை கிடையாது,கவனக்குறைவாக இருந்தால் நாம் அனைவருக்கும் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
  5. குறிப்பிட்ட வயதில் சர்க்கரை நோய் இல்லை என்று கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
  6. வெளியூரில் விருந்தில் கலந்து கொள்ளும்போது நம் சாப்பிடும் உணவு மூலம் கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை வியாதி  வரலாம்.
  7. நாம் உண்ணும் உணவில் சிறு மாற்றம் செய்து,முறையான உடற்பயிற்சி மற்றும் யோகாசனபயிற்சி செய்து வந்தால் சர்க்கரை வியாதியை விரட்டலாம்.
  8. 40 வயதிற்கு மேல் கடினமான உணவுகளை தவிக்க வேண்டும்,முடியவிட்டால் குறைவான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
  9. உடற்பயிற்சி செய்தல் உடலில் உள்ள வெளி பாகங்கள் பலப்படும், யோகாசனபயிற்சி செய்தால் உள் மற்றும் வெளி உறுப்புகளும் பலமடையும்.இதன் மூலம் சர்க்கரை வியாதி உட்பட அனைத்து வியாதிகளும் தீரும்.
  10. இனிப்பு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது,இனிப்பு சாப்பிடாவிட்டாலும் கணையம் பாதிக்கப்பட்டால் சர்க்கரை வியாதி வரலாம்.
  11. அறுசுவை உணவு உண்பதன் மூலம் உடலில் எல்லா உறுப்புகளுக்கும் சரியான அளவில் சத்து கிடைப்பதால் கணையம் பாதுகாக்கப்பட்டு சர்க்கரை வியாதி வருவது தடுக்கப்படும்.
  12. சாப்பிடும் முன் 80/110 வரையும் ,மற்றும் சாப்பிட்ட பின் 80/160 வரையும்,இருத்தல் சரியான அளவு ஆகும்.
  13. 300 க்கு மேல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  14. சித்த வைத்திய முறையில் நல்ல மருந்து உள்ளது.
  15. சர்க்கரை அளவு 110 க்குள் ஆரம்ப நிலையில் இருந்தால் இரவு ஒரு பாத்திரத்தில் ஒரு  வெண்டைக்காய்யை  சிறு சிறு துண்டாக வெட்டி போட்டு 5 கிராம் வெந்தயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி உற வைத்து மறுநாள் காலை வெறும்  வயிற்றில் அதில் உள்ள நீரை குடித்து வர வேண்டும்,இதனை 45 நாட்கள் குடித்து வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
  16. இன்சுலின் போட்டுக் கொண்டு இருந்தாலும் இந்த நீரை அருந்தலாம்,10 நாளில் சர்க்கரை அளவு குறைவதை உணர முடியும்.
  17. தினமும் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் குறையும்.
  18. கணையம் உறுதிப்பட்டால் சர்க்கரை நோய் குறையும்.
  19. வஜ்ராசனதில் அமர்ந்து பாபா முத்திரையுடன் தலையை குனிந்து தரையை தொட முயற்சி செய்ய வேண்டும்,இதன் மூலம் வயிற்று தசைகள் பலமடைந்து கணையம் பலப்படும்,சர்க்கரை வியாதி குறையும்.
  20. தொடர்ந்து செய்ய வேண்டும் விட்டு விட்டு செய்வதால் பயன் இல்லை
  21. எட்டு போட்டு நடப்பது நல்ல பலனை தரும்,உடலை  சுறு சுறுப்பாக்கும்,மற்றும் உடலில் எற்படும் அணைத்து வியாதிகளும் குறையும்,குறிப்பாக சர்க்கரை வியாதி, மூட்டுவலி, கால்வலி, குறுக்கு வலி மற்றும் முதுகு வலியை குறைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago