எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்கிறாா்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதைப்போல சிலுவை பாதை வழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதாமன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசி உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார மாதா பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. தேர் பவனியையொட்டி தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடந்தது. தொடர்ந்து புதுவை- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து புதுவை- கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தேரை புனிதம் செய்தார். இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒலிக்க, மின்விளக்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரிய தேர் பேராலய முகப்பில் இருந்து புறப்பட்டு சென்றது. தேர் புறப்பட்டதும் பேராலயத்தைச் சுற்றி திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி மரியே வாழ்க என கோஷமிட்டு பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல்சமன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா, புனித உத்திரிய மாதா ஆகிய தேர்கள் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் வலம் வந்தன. அப்போது தேரை பின் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேராலயத்தை சுற்றி தேர் வலம் வந்த போது மக்கள் தேர் மீது பூக்களைத் தூவி ஜெபித்தனர். தேர் பவனி பேராலயம் முன் வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவுக்கு நன்றி செலுத்தும் வகையில் பிரார்த்தனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் பெரிய வண்ணத்திரைகள் அமைக்கப்பட்டு தேர் பவனி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குதந்தை, நிர்வாகதந்தை பரிசுத்தராஜ், விடுதிகள பொறுப்பாளர் ஆரோஜேசுராஜ், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல்அலுவலர் பொன்னுசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட் அற்புதராஜ், சமூக ஆர்வலர் கிங்ஸ்லி ஜெரால்டு, ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் பயஸ்வில்சன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் செல்வராஜன், நிர்வாக பங்கு தந்தையர், அருட் சகோதரிகள், வேளாங்கண்ணி கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
செங்கோட்டையன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக தகவல்
08 Sep 2025கோபி : இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த உள்ளார் செங்கோட்டையன் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
இயக்குனர் முருகதாஸை புகழ்ந்த சிவகார்த்திகேயன்
08 Sep 2025இயக்குனர் முருகதாஸ் டென்சன் ஆகமால் இயல்பாக படப்பிடிப்பு நடத்துவார் என சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
-
இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
லோகா - அத்தியாயம் 1 சந்திரா, படத்தின் வெற்றி விழா
08 Sep 2025துல்கர் சல்மானின் வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-09-2025.
08 Sep 2025 -
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
08 Sep 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மீண்டும் 80 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
08 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 80 ஆயிரத்தைக் கடந்த நிலையில் மக்கள் அதிர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு கிராம் 90 உயர்ந்து ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ர
-
தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை; வடமாநில இளைஞர் கைது
08 Sep 2025தூத்துக்குடி : தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் வடமாநில இனைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
சுயமரியாதை கொள்கையில் நான் முதலீடு செய்து வந்திருக்கிறேன்: செய்தியாளர்கள் கேள்விக்கு முதல்வர் பதில்
08 Sep 2025சென்னை, தனது வெளிநாடு பயணம் குறித்து இ.பி.எஸ்.
-
'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் நாளை வரை அவகாசம்
08 Sep 2025சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
மதராஸி திரைவிமர்சனம்
08 Sep 2025துப்பாக்கி கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர பயங்கரவாத கும்பல் ஒன்று முயற்சிக்கிறது.
-
33 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
08 Sep 2025சென்னை, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
08 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர்கள் நீண்டகால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது: மத்திய அரசு தகவல்
08 Sep 2025புதுடெல்லி : இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றாலும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்த நிலையில், ஆவண
-
நடிகர் அஜித் குமாரின் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்த இடைக்கால தடை
08 Sep 2025சென்னை : குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆர்.பி.உதயகுமார் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
08 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வின் எதிர்கட்சி துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,வின் தாயார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.
-
பேபி கேர்ள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
08 Sep 2025நிவின் பாலி நடிக்கும், திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
ராணுவக் காவலில் உள்ள ஆங் சான் சூச்சி கவலைக்கிடம்
08 Sep 2025லண்டன் : ராணுவக் காவலில் உள்ள மியான்மர் முன்னாள் ஆட்சியாளர் ஆங் சான் சூச்சியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் கிம் அரிஸ் தெரிவித்துள்ளார்.
-
காட்டு காளான்கள் சமைத்து சாப்பிட்டதில் 2 பேர் பலி
08 Sep 2025மெல்போர்ன் : அதிக விஷத்தன்மை நிறைந்த காட்டு காளான்கள் சமைத்து சாப்பிட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
சர்வதேச வர்த்தக சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு
08 Sep 2025புதுடெல்லி, சர்வதேச வர்த்தக சவால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
குமரி கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல்
08 Sep 2025குமரி : கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து
-
காந்தி கண்ணாடி திரைவிமர்சனம்
08 Sep 2025ஜமீன் குடும்பத்தை உதறிவிட்டு காதல் மனைவி அர்ச்சனாவுடன் சென்னைக்கு வருகிறார் பாலாஜி சக்தி வேல்.
-
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை - போராட்டம்
08 Sep 2025காத்மண்டு, நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது இதனை எதிர்த்து போராட்டம் வெடித்துள்ளது.
-
பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
08 Sep 2025சென்னை, தமிழகத்தில் பொறுப்பு டி.ஜி.பி. நியமனம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
மழையால் கடும் வெள்ள பாதிப்பு: பஞ்சாப், இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு
08 Sep 2025சண்டிகார் : வடமாநிலங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.