எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா தான் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.
மக்களவை துணைசபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை வருமாறு: அதிமுக தமிழக மக்களின் உயர்வுக்காகவும் மேன்மைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம். இது தான் அண்ணா கண்ட உண்மையான திராவிட இயக்கம். தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுதங்களை வாழ்விக்க வந்த மகானாக எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டனர். எல்லையில்லா வண்ணம் தன்னை நேசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர் மக்களுக்காக உருவாக்கிய இயக்கம் அதிமுக அன்று முதல் இன்று வரை இனிவரும் காலங்களுக்கும் மக்களால் அதிமுக மக்களுக்காக அதிமுக என்பது தான் வரலாறு . இத்தனை சிறப்பு வாய்ந்த இயக்கத்தை தனக்கு பிறகு வழிநடத்த எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா மக்களுக்கால் நான். மக்களுக்காக நான். என்பதே அம்மாவின் தாரக மந்திரம், சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வினை உறுதி செய்யவும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டவும் தன்னையே அர்ப்பணித்து எம்.ஜி.ஆர் காட்டிய புனிதப்பாதையில் வாழ்ந்த அம்மா இன்று நம்மிடையே இல்லாத சூழலில் அதிமுக சிறப்புற வழிநடத்தும் தகுதியும் ஆற்றலும் அறிவும் அனுபவமும் ஒருங்கே அமைய பெற்றவர் சின்னம்மா மட்டுமே.
அகில இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக முதல்வர் ஜெயலலிதா,உருவாக்கப்பட்ட அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சின்னம்மா திகழ்கிறார்கள், கடந்த 35 ஆண்டுகளாக ஜெயலலிதாவோடு நெருங்கி பழகி அவரோடே வாழ்ந்து அவர்களுக்காக எல்லா வகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சின்னம்மா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்குகளில் சிறை சென்று கொடுமைகளுக்கு ஆளானவர், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அனைத்திலிருந்தும் அவரை காப்பாற்றியவர், கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நடத்துவதிலும் அரிய ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாய் நின்றவர் என்று சின்னம்மாவின் சிறப்பு இயல்புகளை ஏராளமாக பட்டியலிடலாம்.
தேர்தல் பணிகளிலும் கழகம் முக்கிய முடிவுகளை எடுக்க நேர்ந்த தருணங்களிலும் தன்னுடைய எண்ண ஓட்டங்களையும் திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகளையும் அறிந்து கொள்ள என்னை போன்ற கழக நிர்வாகிகளை ஜெயலலிதா,சி்ன்னம்மாவின் ஆலோசனைகளை பெற்றுசெயல்படுமாறு பணித்திருக்கிறார்கள் . அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் என்று முறையில் என்னுடைய பணிகளுக்கு அரிய பல வழிகாட்டுதல்களையும் சின்னம்மா அளி்த்திருக்கிறார்கள்., பல்வேறு சோதனைகளையும் சரித்திர நிகழ்வுகளையும் ஜெயலலிதாவோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்ட சின்னம்மா அதிமுகவை வழிநடத்த தேவையான தலைமைப்பண்புகள் நிறைந்தவர்.
பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். அம்மா அவர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சின்னம்மா ஒருவர் மட்டுமே அம்மா வாழ்ந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்இருந்தே ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்க தொடங்கிய நாளில் இருந்தே அவர்களுக்கு துணையாக இருந்து செயல்பட்டவரை அனைவரும் சி்ன்னம்மா என்று அழைக்கத்தொடங்கினோம். அப்படி அழைப்பதை அம்மாவும் ஏற்று அங்கீகரித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே சின்னம்மாவே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பது அதிமுக தொண்டர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்கு அறிந்த ஒன்றாகும். என்னை போன்ற அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த வேண்டுகோளை ஏற்று சின்னம்மா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்று அதிமுகவையும் அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என நன்றிப்பெருக்கோடும், நல்லெண்ண வாழ்த்துக்களோடும் கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்,
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டம்
15 Dec 2025புதுடெல்லி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்: ஜே.பி.நட்டா அறிவிப்பு
15 Dec 2025புதுடெல்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
ஈரோட்டில் நடைபெறவிருக்கும் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் பெண்களுக்கென தனி இடம்
15 Dec 2025சென்னை, ஈரோட்டில் த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


