எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தற்கால வளர் இளம் பெண்கள் பெரும்பாலும் பீசா, பர்க்கர், நூடுல்ஸ், பான்பூரி, பரோட்டா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பரோட்டா :- ஏழைகளின் உணவு என பரோட்டவை சொல்லுகிறார்கள். இது நாண்,குல்ச்சா, ரொமலி ரொட்டி என பல வேறு விசயங்களும் எடுத்துக்கிறது.1930 களில்தான் பரோட்டா தயாரிக்கப் பயன்படும் மைதாமாவு அமெரிக்காவிலிருந்து அறிமுகமானது. அங்கு மைதாவின் பெயர் பேஸ்டரி பவுடர். அதாவது பசைமாவு, இரண்டாம் உலப்போரின்போது ஏற்பட்ட கோதுமைத் தட்டுப்பாட்டால் மைதா மாவு உலகம் முழுவதும் பரவத்தொடங்கியது.
ஒட்டும் பயன்பாட்டிலிருந்து மெல்ல மெல்ல உணவுப் பொருளாக மாறிய மைதா சில ரசாயன சுத்திரிகரிப்புகளுக்கப் பிறகு அழகான பொருளாக பார்ப்போரை ஈர்க்கும் விதத்தில் பளிச்சென வெள்ளை ஆனது.மைதாவை வெள்ளையாக்குவதற்காக பென்ஸாயில் பெராக்சைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. நாகரீகமான வார்த்தைகளில் சொன்னால் அதன் பெயர் ப்ளீச்சிங் கெமிக்கல், புரிகிற மாதரி சொல்வதானால் பினாயில் என்றுதான் சொல்லவேண்டும். கெட்டியாக இருக்கும் மைதாவை மென்மையானதாக மாற்ற அலாக்சான் என்ற ரசாயானம் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயை எலிகளுக்கு வரவழைக்கும் ரசாயனத்தின் பெயர்தான் அலாக்சான்.
மேற்படி மைதாவை ரீபைண்டு ஆயிலோடு சேர்த்து தயாரிக்கிறோம். நச்ச ரசாயனங்களின் கூட்டணியில் அமைந்த பராட்டாவை நாம் சாப்பிடும் போது நமக்கு இளம் வயதிலேயே சர்க்கரை நோய், pcod, obesity போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகிறது.
பிராய்லர் சிக்கன் :- உணவு உண்பது என்பது ஒரு வழிபாடு போல முன்பு இருந்தது.இப்பொழுது சாப்பிடுவது என்பது ஏதோ திருவிழா போல ஆகிவிட்டது. பிராய்லர் கோழியின் உடல் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ரோக்ஸார்ஜோன் என்ற ஹார்மோன் ஊசி மனிதர்களுக்கு புற்று நோயை (கல்லீரல் புற்று) உருவாக்கும் தன்மை வாய்ந்தது என்ற அமெரிக்க ஆராய்ச்சி உணர்த்துகிறது. பிராய்லர் சிக்கனை பயன்படுத்துவோருக்கு உடல் பருமன் மற்றும் வளர்இளம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்பெய்தல் போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகிறது.
நூடுல்ஸ் :- தற்போது மினிபஸ் போகாத கிராமங்ளுக்கு கூட 2 மினிட்ஸ் நூடுல்ஸ் போய்விட்டது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் போதே ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க வேக்ஸ் என்னும் மெழுகு தடவப்படுகிறது. அது பெருங்குடலுக்கு ஆபத்தான ஒன்று. நூடுல்ஸ் சுவையை கூட்டுவதற்கா கூடுதலாக உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து சிறுநீரக பாதிப்பு வர காரணமாக அமைகிறது. மேலும் சுவையை கூட்டுவதற்காக ரசாயனக் கொழுப்பும் சேர்க்கப்படுகிறது. நலம்தரவேண்டிய ஒரு உணவு, சுவை கூட்டுவதற்காக சேய்யப்படும் மசலா கலவை, உப்பு, செயற்கைக் கொழுப்பு, சோடியம் ரசாயனக் சுவை கூட்டிகள் ஆகியவற்றால் நோய் தரும் நஞ்சாக மாற்றப்படுகிறது.
குளிர்பானங்கள் :- வளர் இளம் பருவத்தினரிடம் உணவுக்கு பதில் குளிர்பானங்கள் அதிகம் சாப்பிடும் நாகரீகம் பரவி வருகிறது. இந்த குளிர்பானங்களில் உள்ள செயற்கை பழச்சாறுகள், சுவையூட்டிகளும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பலவிதமான அமிலங்கள் கலக்கப்படுகின்றன. பொட்டாசியம், பென்சோவேட், சோடியம், சைக்ளோமேட், போன்ற வேதிப்பொருட்களையும் பெக்டின் ,அல்ஜினேட்,கராஜெனன் போன்ற திண்மையூக்கிளையும் பயன்படுத்துகின்றனர்.
சிட்ரிக் அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்ற அமிலங்களும் மேற்கண்ட வேதிப்பொடுட்களும் இணைந்து நம் உடலை பதம் பார்க்கின்றன. இரைப்பையின் இயல்பு பாதிக்கப்பட்டு அமிலத்தன்மை உள்ளதாக மாறுகிறது. இரப்பை மற்றும் சிறுகுடல் பெருங்குடலில் புண்களை ஏற்படுத்தும் குணம் இப்பொருட்களுக்கு உள்ளது. தொடர்ந்து குளிர்பானம் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு உணவுகளில் இருந்து சத்துக்களை பிரிக்கும் தன்மை குறைந்து பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், எதுக்களித்தல், வயிற்றுவலி, வயிறு கனமான உணர்வு போன்ற தொந்தரவுகள் தோன்றும். காலப்போக்கில் முழு செரிமான இயக்கமே பாதிப்புள்ளாகும் அபாயம் இவ்வகை வேதிப்பொருட்களால் ஏற்படும். இக்காலத்தில் பெண்களுக்க ஏற்படும் எலும்புச்சிதைவு நோய்க்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக குளிர்பானங்கள் இருக்கின்றன.
துரித உணவில் அதிர்ச்சி தரும் உண்மைகள் :- பாஸ்ட்புட் மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளும் எம்.எஸ்.ஜி என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது. எந்தவகை ஹோட்டலாக இருந்தாலும் துரிதவகை உணவு என்றால் ருசிக்காக எம்.எஸ்.ஜி சேர்க்கப்படுகிறது.பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற நிறைய உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. எம்.எஸ்.ஜி யின் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது. ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும், அடிக்கடி உணவு உண்ணவேண்டும் என்ற உணர்வும் தூண்டப்படும். இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டுமில்லாமல் ,எம்.எஸ்.ஜி சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக்குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் தண்ணீர் அருந்தும் மற்றும் உணவு உட்கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் ஆனவகையாகவே உள்ளன. இவ்வாறு உபயோகிக்கும் பொழுது பிளாஸ்டிக்கில் உள்ள xeno Estrogen என்னும் கெமிக்கல் உடலுக்குள் ஊடுறுவி நமது இயற்க்கையாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை செயல்பாடின்றி செய்து ஈஸ்ட்ரோஜன் செயல்பாடு போல xeno Estrogen செயல்படும். ஆனால் xeno Estrogen னினால் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் போல் சினை உறுப்பு கருமுட்டை வளர வைக்கவோ, வெடிக்க வைக்கவோ முடியாது. இதனால் வளர்இளம் பெண்களுக்கு pcod ம் சினை உறுப்பு நீர்கட்டிகளும் உண்டாகி முறையற்ற மாதவிடாய் போக்கை உண்டாக்குகிறது. இதனாலேயே முன்மாதவிடாய் சிக்கல்களாக எரிச்சல், கோபம், டென்சன், மனஅழுத்தம், மன உளச்சல் முதலியன பெரும்பாலான வளர் இளம் பெண்களுக்கு உண்டாகிறது.
இதற்கான தீர்வு :- 1.கூடுமானவரை இயற்கை உணவுகளை மற்றும் ஆர்கானிக் உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டும். 2.துரிதஉணவுகளை தவிர்க்க வேண்டும். நம்மால் முடிந்தவரை உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வீட்டிலேயே ரெடி செய்து கொள்வது நல்லது. நம்முடைய பாரம்பரிய நூடுலான இடியாப்பத்தை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தலாம். தினசரி உணவாக இருக்கும் நூடுல்ஸை படிப்படியாக மாற்றி சிறு தானிய உணவுகளைப் பழக்கப்படுத்தலாம். குளிர்பானங்களுக்கு பதிலாக வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், பழ ஜூஸ்களைக் குடிக்கலாம். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு பராட்டாவிற்கு பதில் கோதுமை பராட்டா, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட பழக்கலாம். 3. ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. caffine, chocklate அதிகம் உட்கொள்ளக்கூடாது.
5. யோகாசனம், தியானம்,போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் "காலை மாலை தினம் நடப்பவரின் காலைத் தொட்டுக் கும்பிடுவான் காலனே"
6.தண்ணீர் அருந்துவதற்கு மண்பானை, மற்றும் செப்பு பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.( தண்ணீர் அருந்தும்போது இதில் உள்ள காப்பர் தனிமம் நமது உடலுக்குள் ஊடுறுவி சினை உறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது). பூப்பெய்திய முதல் ஓராண்டு வரையாவது பெண்கள் சரியான உணவு முறைகளை உட்கொள்ள வேண்டும். வயதுக்கு வருவது என்பது வெறுமனே உதிரப்போக்கு அல்ல. அந்த காலகட்டத்தில் பெண்ணின் கருப்பை, சினை உறுப்பு வளர்ச்சியும், இடுப்பு எலும்பு வளர்ச்சியும் மற்ற எலும்புகளின் வளர்ச்சியும் அதிகமாகிறது. எனவே அந்த நேரத்தில் ஏராளமான புரதம், கால்சியம்,மற்றும்இரும்புசத்து தேவை. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் பெண்கள் வயதுக்கு வரும்போது முட்டை ,நல்லெண்ணெய், உளுந்து போன்றவற்றை கட்டாயம் சாப்பிடத்தரும் பழக்கம் இருக்கிறது.
4.இரத்த சோகை :- வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு உட்கொள்ளாமை பெரும்பாலான பள்ளி மாணவ மாணவிகள் பகல் உணவைத் தவிர்க்கிறார்கள். இயற்கை உணவான கீரை, காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,. சுகாதாரமற்ற முறையில் சாலை ஓரங்களில் கிடைக்கும் பாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதினால் வரும் வயிற்றில் பூச்சி மற்றும் கிரிமி தொல்லைகளினாலும் இரத்தசோகை வரலாம். வளர் இளம் பெண்களுக்கு இப்பருவத்தில் வரும் ஒழுங்கற்ற மாதவிடாய் போக்கினாலும் இரத்த சோகை வரலாம்.
இதற்கான தீர்வு :- இதற்குத்தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து காரணங்களை சரிசெய்ய வேண்டும். வளர் இளம் பருவத்தில் போதுமான சரிவிகித உணவு- பழங்கள், கீரைகள், காய்கறிகள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் அப்பருவத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதினால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
5. தலைமுடி உதிர்தல் :- போதுமான சத்துணவு உட்கொள்ளாததினாலும், தேவையற்ற இராசாயன பொருட்கள் கலந்துள்ள சாம்புகளை பயன்படுத்தினாலும், தலைமுடி யை சரிவர பராமரிக்காததாலும், மலச்சிக்கல், இரத்த சோகை, போன்ற காரணங்களினாலும், அதிக மன அழுத்தத்தினாலும், தலைமுடி வேர்களுக்கு தேவையான இரத்த ஓடேடமும் போசாக்கும் கிடைப்பதில்லை.ஆகையால் தலைமுடி உதிர்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.