எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலக அரங்கில் நாம் பால் உற்பத்தியில் முதல் இடம் வகித்தாலும், கால்நடைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இந்த உற்பத்தியானது மிகவும் குறைவேயாகும். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று பசுந்தீவனப் பற்றாகுறை ஆகும். ஒரு பசுவின் வளமான வளர்ச்சிக்கு ஒருநாளைக்கு குறைந்தது 20 கிலோ பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். ஆனால் இக்காலகட்டத்தில் நிலப்பற்றாகுறை மற்றும் பருவமழை பொய்ப்பு காரணமாக பசுந்தீவன உற்பத்தி ஆண்டு முழுவதும் கிடைப்பதில்லை. ஆகவே, பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு சிக்கனமான சிறந்த சேமித்து வைக்கும் முறைகளை அறிதல் அவசியம்.
பசுந்தீவனப் பயிர்களைசேமிப்பதற்கான தொழில் நுட்பங்கள் - பசுந்தீவனத்தை இரு வகைகளில் சேமித்துவைக்கலாம்.
1. பசுந்தீவனத்தை அதன் பசுமைமாறாமல் பதப்படுத்திகுழிகளில் சேமித்துவைக்கும் ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறை
2. பசுந்தீவனத்தை அதன் சத்துக்கள் குறையாத வண்ணம் சரியான தருணத்தில் அறுவடை செய்து நிழலில் உலர்த்தி உலர் தீவனமாக்கி படப்புபோர் அமைத்து சேமித்தல்
அ. ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரித்தல்
பருவமழைக்காலங்களில் கிடைக்கும் கூடுதலான தீவனத்தை விரயப்படுத்தாமல் சேமித்து, தீவனம் குறைவாக கிடைக்கும் காலங்களில் பயன்படுத்துவதற்கு ஒரு சிக்கனமான சிறந்த வழி ஊறுகாய்ப்புல் தயாரிப்பதாகும். குறைந்த செலவில் குழிகள் எடுத்து, பசுந்தீவனத்தை பதப்படுத்தி சேமித்து ஊறுகாய்ப்புல் தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
ஊறுகாய்ப்புல் தீவனம் (சைலேஜ்) தயாரிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
•தீவனப்பயிர்களின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மாறுவதில்லை. கால்நடைகளும் உறுகாய்ப்புல்லை; விரும்பி உண்ணும். எனவே பசும்புல் கிடைக்காத காலங்களில் ஊறுகாய் ;புல்லை மாடுகளுக்கு அளிக்கலாம்.
•கடினமான தண்டு மற்றும் முற்றிய புல்லைக்கூட ஊறுகாய்ப்புல்லாய் மாற்றுவதன் மூலம் அவை மென்மைப்படுத்தப்பட்டு கால்நடைகள் விரும்பி உண்ண ஏதுவாகும்.
•தீவனப்புல்லுடன் உள்ளகளைகள், விதைகள் இதன் மூலம் அழிக்கப்படுகிறது.
•ஊறுகாய்ப்புல்லை 9-12 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம்.
ஊறுகாய்ப்புல் தயாரிக்கஉகந்ததீவனப்பயிர்கள்
1.தீவனச்சோளம்
2.தீவனமக்காச்சோளம்
3.கம்புநேப்பியர் ஒட்டுப்புல்
நம் நாட்டில் அதிகஅளவில் பயிரிடப்படுவதால் சோளப்பயிர் கொண்டு ஊறுகாய்ப்புல் தயாரிப்பது பற்றி அறிவது நன்மை பயக்கும். ஊறுகாய் புல் உற்பத்திக்கு தீவனச்சோளம் எம்.பி.சாரி, தீவனச்சோளம் கோ-27, தீவனச்சோளம்கோ. எப்.எஸ்-29 போன்ற தீவனச்சோள இரகங்கள் ஏற்றவை.
ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் வழிமுறைகள்
1.தேர்ந்தெடுக்கப்பட்ட தீவனச்சோள இரகங்களை மானாவாரியாக, வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பயிரிடவேண்டும்.
2.தீவனச்சோளத்தின் கதிர்கள் பால்பருவத்தில் இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.
3.அறுவடை செய்த தீவனச்சோளத்தை வயலிலேயே 1-2 மணி நேரம் உலரவிட வேண்டும்.
4.உலரவிடப்பட்ட தீவனத்தை சிறுசிறு கட்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 35 முதல் 40 சதவீதம் உலர் எடை இருத்தல் அவசியம்.
5.இந்த சிறுகட்டுகளை ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள குழிகளில் அடுக்கடுக்காக நிரப்ப வேண்டும்.
6.அடுக்கடுக்காக நிரப்பும் போது அடுக்குகளை நன்குமிதித்துவிடுவதன் மூலம் இடையிலுள்ள காற்றை வெளியேற்றுவது மிகவும் அவசியம்.
7.ஒருடன் தீவனப்பயிருக்கு 20 கிலோ மொலாசஸ், 8 கிலோ சாதாரண உப்பு தூவ வேண்டும். மொலாசஸ் கிடைக்கப் பெறாத விவசாயிகள் வெல்லப்பாகினைடன் ஒன்றுக்கு 20 கிலோ என்று பயன்படுத்தலாம்.
8.சைலேஜ் குழிகள் நிரம்பியவுடன் தரைமட்டத்திற்கு மேல் 1-2 அடிவரையில் தீவனச்சோளத்தை அடுக்கி அதன் மேல்புறத்தை தீவனச்சோளம் கொண்டே கூம்புவடிவில் அமைக்க வேண்டும்.
9.குழிகளில் கூம்பு அமைத்து, அதன் மேல் பாலிதின் தாள் அல்லது புல் கொண்டு மூடி அதன் மேல் மண் கொட்டி காற்றுப்புகாமல் அடைக்க வேண்டும்.
10.பொதுவாக ஊறுகாய்ப்புல்லை மழைக்காலங்களில் தயாரிக்கும் சூழல் இருப்பதால், மழைநீர் உட்புகாதவாறு மேலும் மண் கொட்டி விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
11.பதப்படுத்தப்பட்டஊறுகாய்ப்புல், மூன்று மாதங்களுக்கு பிறகு கால்நடைகளுக்கு கொடுப்பதற்கு உகந்ததாக இருக்கும்.
இவ்வாறு பதப்படத்தப்பட்ட ஊறுகாய்ப்புல்லை கறவைமாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும், வெள்ளாடுகளுக்கும் கோடையில் உணவாக கொடுக்கலாம். இதனால்; கோடையில் ஏற்படும் பசுந்தீவனப் பற்றாக்குறையை பூர்த்திசெய்யலாம். கறவைமாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 20 - 25 கிலோ என்ற அளவில் அளிக்கலாம்.
தயாரிப்பிலுள்ள இடர்பாடுகள் அல்லது கருத்தில் கொள்ள வேண்டுபவை
•தகுந்தமுறையில் பதப்படுத்தப்படாவிட்டால், தீவனப்பயிர்கள் கெட்டுப்போகவும், சத்துக்கள் வீணாகவும் வழி ஏற்படும்.
•ஒரு முறை சைலேஜ் குழியை திறந்து ஊறுகாய்ப்புல்லை எடுக்க ஆரம்பித்துவிட்டால், தொடர்ந்து அவை எடுக்கப்பட்டு கால்நடைகளுக்கு அளிக்கப்படவேண்டும.;
•ஊறுகாய்ப்புல் நல்ல நறுமணத்துடன் - பழ வாசனையுடன் இருக்க வேண்டும்.
•அமிலத் தன்மை 4.2 முதல் 4.8 வரை இருக்க வேண்டும்.
•அமோனியாஅளவு 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கானகுழிகள் அமைத்தல்
ஊறுகாய்ப்புல் தயாரிக்க தரைமட்டக்குழிகள் அமைத்து பதப்படுத்தும் முறை சிறந்தாகும். நீளம் 15 அடி, அகலம் 12 அடி, ஆழம் 6 அடி என்ற அளவுள்ள தரைமட்டக்குழிகளில் 50டன் வரை பசுந்தீவனத்தை பதப்படுத்த இயலும். அந்த வகையில் ஒரு டன் பசுந்தீவனத்தை ஊறுகாய் புல்லாகபதப்படுத்த 28-30 கனஅடி இடம் தேவைப்படும். மழைகாலங்களில் குழிகளில் நீர் கசிவைத்தடுக்க, பண்ணையின் மேட்டுப்பாங்கான இடத்தில் குழிகள் அமைக்கப்படவேண்டும். குழிகளின் உட்புறசுவர்கள் சிமெண்ட் கொண்டு பூசப்படுவதன் மூலம் உட்புறநீர்கசிவைத்தடுக்கலாம். குழிகளின் ஆழம் 6 அடிக்குமிகாமல் இருப்பதன் மூலம் இலகுவாக தீவனத்தை குழிகளில் இறக்கி அடுக்க ஏதுவாக இருக்கும்.
ஆ. படப்புபோர் அமைத்தல் :
தீவனப்பயிர்களை குறிப்பாக தீவனச்சோளம், கடலைக்கொடி, துவரஞ்செடி போன்றவற்றை கோடைகாலத் தீவனமாக பயன்படுத்த அறுவடைக் காலத்தில் படப்பு அல்லது போர் அமைத்து சேமிக்கலாம்.
ஏற்றதீவனப்பயிர்கள்:
பூக்கும் தறுவாயில் அறுவடைசெய்ததீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகள்
செய்முறை:
1. பூக்கும் தறுவாயில் அறுவடை செய்த தீவனசோளம,; கடலை அல்லது பருப்பு எடுத்தபின் மீந்துள்ள கடலை, துவரை மற்றும் உளுந்தஞ் செடி அல்லது கொடிகளை உடனடியாக வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும்.
2. நன்கு உலரவைக் கட்டுக்கட்டாகக் கட்டி சரியாக குவித்தல் வேண்டும். உலர் எடை 85 முதல் 95 சதவீதம் இருத்தல் நல்லது.
3. பின்பு, மேடுநிறைந்த மறைவான இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக உயரமாக அடுக்கி வைக்க வேண்டும்.
4. ஒவ்வொரு அடுக்கு இடையிலும் யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிக்கலாம். 100 கிலோதீவனத்துக்கு 2 முதல் 4 சதவீதம் இந்த உப்புக்கரைசலை தெளிக்கலாம்.
யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலைத் தெளிப்பதால் ஏற்படும் நன்மைகள்
1. யுரீயா மற்றும் சாதாரண உப்புக்கரைசலை தெளிப்பதால் நைட்ரஜன் சத்து மிகுந்த தீவனம் கிடைக்கிறது. மேலும் செரிமான ஊட்டசத்துக்கள் அளவும் திறனும் அதிகரிக்கிறது.
2. எல்லாக் காலங்களிலும் சத்துமிக்கஉலர்தீவனம் கிடைக்கிறது.
முடிவுரை:
நமதுநாட்டில் சிலஅரசுப் பண்ணைகளில் மட்டுமேஊறுகாய்ப்புல் மூலம் பசுந்தீவனப் பயிர்கள் பதப்படுத்தப்பட்டுகால்நடைகளுக்குஅளிக்கப்படுகிறது.ஊறுகாய்ப்புல் தயாரிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நேரடியாகவும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் மானியம் வழங்கிஊக்குவிக்கிறது. இம்முறையை பெரும்பாலான விவசாயிகள் கடைப்பிடித்தால், கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை வருடம் முழுவதும் அளிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு உதவி பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம். தொலைபேசி 0427-2410408.
தொகுப்பு: முனைவர் ப.ரவி, முனைவர் து.ஜெயந்தி
மருத்துவர் பி.ஸ்ரீபாலாஜி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.