எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் கற்பகம் கூட்டுறவு அங்காடி ராஐhகோபால் நிலைய வளாகத்தில் வேலூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார். இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மரு.தா.செங்கோட்டையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.விழாவில் கலெக்டர் அவர்கள் மின்னணு அட்டைகளை வழங்கி பேசியதாவது. நியாயவிலை கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு குறைவான விலையில் உணவு பொருள் வழங்கும் முறை என்பது இரண்டாம் உலகபோரின் போது ஏற்பட்ட உணவு தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டின் ஒரு சில பகுதிகளில் அரசு பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்க ஏற்பாடுகளை செய்தது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முதலாக மும்பையில் 1939 ஆம்ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு இந்த திட்டத்தை நிறுத்தி விட அரசு முற்பட்டபோது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் தொடர்ந்து நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் முதல் 5 ஆண்டு திட்டத்தில் அரிசி மற்றும் கோதுமைகளை வழங்கலாம் என்று முடிவு செய்து அவ்வாறே நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 2013 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஏறக்குறைய 11 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இந்த குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக நவீன காலத்திற்கு ஏற்றார் போல மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க ஆணை பிறப்பித்து அவற்றின் மீது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் குடும்ப அட்டைகள் குறித்தும் பொருட்கள் வழங்குவது குறித்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவைகள் வெற்றிகரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது குடும்ப அட்டைகளை மின்னணு குடும்ப அட்டை (ளுஆயுசுவு ஊயுசுனு) எனும் கையடக்க அட்டையாக மாற்றப்பட்டு நமது வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வேலூர் வட்டத்தில் 7703ம் ,வாலாஐh வட்டத்தில் 15838ம் அரக்கோணம் வட்டத்தில் 11215ம் மின்னணு அட்டைகளும் இன்று முதல் வழங்கப்படுகிறது மேலும் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 8,87,933 குடும்ப அட்டைகளுக்கும் படிப்படியாக இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்த மின்னணு குடும்ப அட்டையில் குடும்ப தலைவரின் புகைபடம் அச்சடிக்கப்பட்டிருக்கும். இந்த அட்டை தொலைந்து போனாலும் அரசின் பொது சேவை கணினி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெயர் சேர்த்தல் நீக்கல் மேலும் குடும்ப தலைவரின் புகைப்படத்தை மாற்றுதல் போன்றவைகளை அட்டைதாரர்களே இணைய தளத்தின் வழியே தற்போது செய்து கொள்ள எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் அந்தந்த நியாவிலை கடைகளிலே வழங்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளபோது குடும்ப அட்டைதாரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வழியாக அடையாள எண் அனுப்பி வைக்கப்படும். இந்த அடையாள எண்ணினை வரபெற்ற 7 நாட்களுக்குள் நியாய விலை கடை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய குடும்ப அட்டையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை கிடைக்க பெறாதவர்கள் பழைய குடும்ப அட்டையை கொண்டே இன்னும் இரண்டு மாதங்களுக்கு உணவு பொருட்களை நியாயவிலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு கலெக்டர் சி.அ.ராமன், பேசினார். இந்த விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஐய்சீனிவாசன், வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.ராஐh, துணை தலைவர் மணி, மாவட்ட பதிவாளர் பொது விநியோக திட்டம் முனிராஐ;, வேலூர் வட்டாட்சியர் பழனி, தனிவட்டாட்சியர் குடிமை பொருள் இளஞ்செழியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.இந்த விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்,இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட மொத்த கூட்டுறவு பண்டக சாலை மேலாண்மை இயக்குநர் காமாட்சி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.


