எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அக்ரினி குடியிருப்பில் உள்ள வசுதாரா குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.
மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். குப்பைகளையும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியும். மேலும் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. எனவே நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாடித் தோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய இடம் இருந்தாலே இதற்கு போதுமானது. மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் மாடித் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து சுத்தமான காய்கறிகளை பெறலாம். மாநகராட்சி என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்ததுதான். எனவே சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு அனைவரும் முன் உதாரணமாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம்;. இந்த நிலைமையை மாற்றி மட்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மட்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எவைஎவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மட்கும் குப்பையிலிருந்து உரமும் மட்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் திரு.சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் திரு.செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், செயற்பொறியாளர் திரு.சேகர், வசுதாரா அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் திரு.எல்.சுரேஷ், இணை செயலாளர் திரு.மோகன், பொருளாளர் திரு.நாகராஜன், என்லைட் டிரஸ்ட் நிறுவனர் செல்வி.ப்ரியதர்சினி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் குடியிருப்;போர் சங்கத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2-வது நாளாக போராட்டம்
23 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க ஆகஸ்ட் 24 வரை தடை
23 Jul 2025புதுடெல்லி : இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
புதிய துணை ஜனாதிபதி தேர்வு: தேர்தல் பணியை துவங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
23 Jul 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை, முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
லண்டன் சால்போர்ட் நகரில் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம்
23 Jul 2025லண்டன் : லண்டன் சால்போர்ட் நகரி் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்
23 Jul 2025டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
23 Jul 2025ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Jul 2025ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.