எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அக்ரினி குடியிருப்பில் உள்ள வசுதாரா குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.
மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். குப்பைகளையும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியும். மேலும் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. எனவே நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாடித் தோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய இடம் இருந்தாலே இதற்கு போதுமானது. மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் மாடித் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து சுத்தமான காய்கறிகளை பெறலாம். மாநகராட்சி என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்ததுதான். எனவே சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு அனைவரும் முன் உதாரணமாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என்றார்.
ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :
நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம்;. இந்த நிலைமையை மாற்றி மட்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மட்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எவைஎவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மட்கும் குப்பையிலிருந்து உரமும் மட்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் திரு.சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் திரு.செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், செயற்பொறியாளர் திரு.சேகர், வசுதாரா அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் திரு.எல்.சுரேஷ், இணை செயலாளர் திரு.மோகன், பொருளாளர் திரு.நாகராஜன், என்லைட் டிரஸ்ட் நிறுவனர் செல்வி.ப்ரியதர்சினி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் குடியிருப்;போர் சங்கத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு பா.ம.க. தலைமையகம் மாற்றம்: ராமதாஸ்
24 Jul 2025விழுப்புரம், சென்னையில் இருந்து பா.ம.க. தலைமையகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பை அறிவித்தது மாநில அரசு
24 Jul 2025திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
-
இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் வரும் பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு?
24 Jul 2025சென்னை, தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
நடப்பு ஆண்டில் மட்டும் இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் பதிவு
24 Jul 2025புதுடெல்லி: இந்திய விமானங்களில் இந்த ஆண்டு மட்டும் 183 முறை தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.1000 குறைந்தது
24 Jul 2025சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் (ஜூலை 23) ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1000 குறைந்து விற்பனையானது.
-
மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
24 Jul 2025சென்னை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மிசோரமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
24 Jul 2025அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்ட
-
திடீர் வெள்ளம், நிலச்சரிவு: தென் கொரியாவில் பலி 23 ஆக உயர்வு
24 Jul 2025தென்கொரியா:தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சக
-
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
24 Jul 2025சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க
-
'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் ஓரிரு நாளில் வழக்கமான பணிக்கு திரும்புவார்; தனியார் மருத்துவமனை அறிக்கையில் தகவல்
24 Jul 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட 'ஆஞ்சியோ' பரிசோதனையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ள தனியார் மருத்துவமனை, அவர் நலமுடன் உள்ளதாகவும், ஓரிரு ந
-
தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் வைகோ
24 Jul 2025டெல்லி: மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் வைகோ கலைஞருக்கு நன்றி தெரிவித்தார்.
-
2 குழந்தைகள் கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை சிறை காஞ்சிபுரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
24 Jul 2025காஞ்சிபுரம்: 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு நீதிபதி பிறப்பித்தார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம்பெற த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
24 Jul 2025சென்னை: முதல்வர் ஸ்டாலின் நலம்பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் அட்டவணை வெளியீடு மீண்டும் அணியில் விராட், ரோகித்
24 Jul 2025மும்பை: வெளிஇடப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அணியில் விராட், ரோகித் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்...
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
4-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்கள்
24 Jul 2025மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
-
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
24 Jul 2025லண்டன், இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல்: இந்தியாவுக்கு 77-வது இடம்
24 Jul 2025டெல்லி: உலகின் வலிமையான பாஸ்போர்ட்டு பட்டியலில் இந்தியாவுக்கு 77-வது இடம் கிடைத்துள்ளது.
-
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி 6 மாவட்டங்களில் இன்று கனமழை
24 Jul 2025புதுடெல்லி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை
24 Jul 2025புதுடெல்லி, மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் நிறுத
-
சீனாவில் கொளுத்தும் வெயில்
24 Jul 2025பீஜிங்: சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது.
-
இ.பி.எஸ். சுற்றுப்பயணத்தில் மாற்றம்
24 Jul 2025சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் தொடா் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுத்தால் ரூ.ஆயிரம் அபராதம் ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
24 Jul 2025சென்னை: ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுத்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.