எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிக்கூடம் கல்வி பயிலும் கோயில். எனவே, சரியான நேரத்தில் சரியான செயலை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். ஊக்கமுடைமை, நன்னடத்தை, நேரம் தவறாமை, தூய்மையுடைமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகள் வாயிலாக நல்ல பெயர் பெறுங்கள். சொக்கத் தங்கத்தைக் காட்டிலும் நல்ல பெயர் பெறுவதே விலை மதிப்பற்றது.
உங்களையே நீங்கள் மதிக்கும் மனஉணர்வைப் பண்படுத்துங்கள். அதுபோன்றே நண்பர்களையும், அதிகாரிகளையும் மதித்து நடங்கள். மற்றவர்கள் நயநாகரிகமும் கனிவும் கலந்த பழகியல் பண்புடன் நடந்து கொள்வதையே மரியாதை என்கிறோம். அது தனி நபர் ஒருவரை இனிமை. கவர்ச்சி, இணக்கம், கனிவு, அமைதி கொண்டவராக அணி செய்கிறது.
உங்களது வெளி நடத்தை வாயிலாக இத்தகைய மதிப்புணர்வையும் காட்டுங்கள். அது பல நண்பர்களைப் பெற்றுத்தரும்: மென்மையினால் உங்களை அணி செய்யும்.
மென்மையான தொனியில் பேசுங்கள். இதனால், சீரிய பண்பாளராகவோ, பண்பட்ட மங்கையாகவோ உங்களையே பயிற்சிக் கொள்கிறீர்கள். குரலில் ஏற்ற இறக்கம், உச்சரிப்பிலே தெளிவு, சீரான தொனி, தெளிவான உச்சரிப்பு ஆகியவை மரியாதைக்குரிய மற்றும் பண்பட்ட மக்களின் அடையாளங்கள்.
மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டிய வேளைகளில் மௌனமாக இருங்கள். மௌனம் பொன் போன்றது: அரியவற்றைச் சாதிப்பதற்கு உதவுகிறது. ‘இடை யறாமல் உண்மையைத் தேடுவதில் ஈடுபட்டிருப்பவர் வாழ்க்கைக்கு மௌனம் இன்றி யமையாதது’ என்கிறார் காந்தியடிகள். நாவடக்கம் மகத்தான கலை; நாகாக்கக் கற்றுக்கொண்டு விட்டால் அது உங்கள் ஆணைப்படி நடக்கும் ; சிக்கல்கள் பலவற்றிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
உங்களின் ஒவ்வொரு அசைவுகளிலும், பாவனைகளிலும் அமைதியும் அருளும் தவழட்டும். எப்போதும் எளிமையும், தன்னடக்கமும் உள்ளவராக இருங்கள். தாழ்வாரத்திலோ முற்றத்திலோ ஓடித் திரிதல் கூடாது. நோக்கமின்றிக் கண்டபடி சோம்பித் திரிவோர் போலத் திரியக் கூடாது. தக்க காரணத்துடன் சென்று வருதல் நன்று. கூச்சல் எழுப்பாதீர். நீங்கள் ஓடிக் குதித்து விளையாடவும், தாண்டித் தாவி ஆடவும் மேசைகள் செய்யப்படவில்லை. அவற்றின் மீது ‘தடதட’ எனத் தட்டுவதும் அழுக்காக்குவதும் செய்யத் தகாதவை!
தாழ்வாரத்தின் வழியாக நடந்து போகும் பொழுது, தக்க காரணம் இருந்தா லன்றி, ஒவ்வொரு வகுப்பறையினையும் முறைத்துப் பார்த்தவாறே செல்லுதல் கூடாது. மற்றவர்கள் செயல்களில் தலையிடத் தேவையில்லை. நாவடக்கத்தைப் போலவே கண்ணடக்கமும் முக்கியம்.
வகுப்புத் தொடங்கப் போவதற்கான அறிகுறியாக, முதல்மணி ஒலித்தவுடன், வகுப்பறைக்கு உள்ளே போய் உட்கார வேண்டும். ஆசிரியர் வருகிறவரை அமைதி யாக இருக்க வேண்டும். கதவருகே ஆசிரியர் வருவது தெரிந்ததும், மரியாதை காட்டும் முறையில் எழுந்து நிற்க வேண்டும். அவர் அமரும் வரையிலோ, உட்காருங்க! எனச் சொல்லும் வரையிலோ சிறிது நேரம் நின்றவாறு காத்திருத்தல் வேண்டும்.
காலம் தாழ்த்தாமல் வகுப்புக்குச் சென்று வருவது நல்ல பழக்கம். காலந் தாழ்த்தாமை போற்றுதலுக்குரிய செயல்முறை: மேலும் அது, காலம் குறித்த நமது அர்ப்பண ஈடுபாட்டு உணர்வைக் காட்டும்: அமைதி, நிம்மதி, சாந்தம், தன்னம் பிக்கை ஆகியன நம்மில் வளர உதவும். அதனைக் கண்டிப்பாகக் கடைபிடித்தோ மென்றால், மற்றவர்களின் மரியாதையைப் பெற்றுத் தருவதோடு நற்பண்பு நல வளர்ச்சிக்கு உதவும்.
காலதாமதமாக வர நேரிட்டுவிட்டால், வகுப்பறைக்கு நேராகச் சென்று, நுழைவாயிலருகே தொடை நடுங்கியவாறு நிற்கத் தேவையில்லை. பவ்வியமாக ஆசிரியரிடம் சென்று, தாமத அனுமதிச் சீட்டைக் கொடுத்து, தெளிவான அடக்கமான குரலில் ‘வணக்கம் ஐயா’ (அ) ‘வணக்கம் அம்மா’ (அ) ‘வணக்கம் ஃபாதர்’ (அ) ‘வணக்கம் சிஸ்டர்’ என பொருத்தமானதைக் குறிப்பிடுக. பின்னர் ‘ஐயா’ மன்னிக்க வேண்டும்: இன்று புகைவண்டி தாமதம் (அ) முன்கூட்டிப் புறப்பட்டு வரும் பேருந்தைத் தவறவிட்டு விட்டேன். இவை போன்ற உண்மைக் காரணங்களுள் ஒன்றினைக் கூறலாம். காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடாது.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் அல்லது கேள்விகேட்டு, ஐயம் தீர்த்துக் கொள்ள விரும்பினால், ‘ஐயா, அம்மா அருள்கூர்ந்து, இதை நான் தெரிந்து கொள்ளலாமா? ‘எனக்கு இதைப்பற்றி மீண்டும் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?’ போன்ற வினாக் களைப் பவ்வியமான சொற்கள் மூலம் கேட்கலாம்.
வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பேசக்கூடாது. பேசுவதற்குத் தவிர்க்க இயலாத தேவை ஏற்படுமென்றால், பக்கத்து மாணவர் காதில் கிசு கிசுக்கும் முறையிலோ அல்லது பாவனை மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆசிரியர் உங்களைக் கவனிக்காத நேரம் பார்த்து நெருப்புக் கோழி போலப் புத்தகத்திற்குள் தலையை இழுத்து மறைத்தவாறோ, கள்ளத்தனமாகவோ பேசுதல் கூடாது.
வகுப்பு முடிந்தவுடன், ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் வரையில், அமைதியாக உங்கள் இடத்திலேயே எழுந்து நின்று காத்திருங்கள். ஆசிரியர் முதலில் வெளியில் செல்லட்டும்: அவருக்கு முந்திச் சென்று வெளியேறு வதற்கு நெருக்கிப் பிடித்துப் போகவேண்டாம்.
பள்ளி அரங்கத்தினுள் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளே நுழையும்பொழுதும், வெளியே போகும்பொழுதும் மேற்கூறியவாறு நடந்து கொள்வது நன்று. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முக்கிய பங்கேற்பாளர்கள் முதலில் வெளியே செல்லும் வரையில் காத்திருங்கள்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்கு, மெல்ல கைகளைத் தட்டித் தெரிவித்தால் போதும். முரசு முழக்குவது போலத் தாளகதியில் தட்டிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. மேசை மீது தட்டுவதும், தரைமீது காலடிகள் ஓசை எழுப்புவதும் செய்யக்கூடியது அல்ல. ஆரவாரமும் சண்டித்தனமும், செய்யாதீர்கள்.
ஆசிரியர் ஒருவர் தமிழ்மொழியில் கேட்கும்பொழுது தமிழிலேயே பதில் கூறுங்கள். ஆங்கிலத்தில் பதிலளிப்பது முறையல்ல. ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் தமிழில் பதிலளிக்காமல், ஆங்கிலத்திலேயே பதில் கூறுங்கள். முணுமுணுத்தவாறு பதில் சொல்லிக்கொண்டிருத்தல் கூடாது. தெளிவாகப் பேசு பவரே பண்பட்ட மனிதர்.
எந்தவொரு மொழியையும் புதிதாகப் பேசவோ, எழுதவோ, பயிலும்போது அம்மொழிச் சொற்களின் சரியான அசையழுத்தம், தொனி, உச்சரிப்பு முறை ஆகி யன அனைத்தையும் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
பொது நல நோக்கில் சிறுவேலைகளைச் செய்ய வேண்டியிருந்தால், உதவ வேண்டும். சான்றாக, சன்னல்களைத் திறந்து வைத்தல், மேசைகளை வேறு இடம் கொண்டு செல்லல், வகுப்பறையைத் துப்புரவு செய்தல் முதலியன. பண்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் முந்திவந்து நின்று பணிசெய்து உதவி செய்வார்கள்.
பள்ளி, விடுதி, நூலகம் ஆகியவற்றின் நெறி முறைகள் அனைத்தையும் மதித்து நடங்கள்.
சுவர்களின் மீதோ, கரும்பலகை மீதோ கண்டதைக் கிறுக்காமல் தவிர்த்து விடுங்கள்.
கசக்கிய குப்பைக் காகிதங்களைத் தரைமீதோ, மண்மீதோ வீசி எறியக்கூடாது. மேசை மீதோ, தரைமீதோ மையைக் கொட்டுவதோ, போனா விலிருந்து உதறி உதிர்ப்பதோ கூடாது. உங்கள் வீட்டுக்குள் எவராவது அவ்வாறு செய்வதைக் காண நேர்ந்தால் கண்டிப்பீர்கள் அல்லவா?
வகுப்பிற்கோ, பள்ளிக்கோ புதிதாக வருபவர்களை, குறிப்பாகப் பெண்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது நாகரீகம் அல்ல. அடக்கமற்ற அச்செயல் உங்களைத் தாழ்த்தும். ஒருவரிடம் நெருங்கிப் பேசும்பொழுது, அவர் வாயருகே நெருக்கமாகச் சென்று பேசாதீர்.
வாய்ச் சவடால் மொழிவதும் செய்யத்தகாத செயல்.
தேர்வுக்குக் குறித்த நேரத்தில் சென்று சேருங்கள்: புத்தகங்களை வகுப்ப றைக்கு வெளியே வையுங்கள்; மற்றவரைப் பார்த்தெழுத முயற்சி செய்வது நேர்மையற்றதும், ஒழுக்ககேடானதுமான செயலுமாகும். வினாத்தாளை வழங்கியதும் கவனமாகப் படியுங்கள். வினாவுக்கேற்ப நேரடி யான விடையை எழுதுங்கள்: நேர்த்தியாக எழுதுங்கள்: இடப்பக்கத்தில் வரைவுக் கோடு வரையுங்கள். இறுதி ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே தேர்வை முடியுங்கள். தாளின் பக்கவரிசை முறையைச் சரிபார்த்துக் கட்டுங்கள். பின்னர் எழுதிய விடை முழுவதையும் விரைவாகச் சரி பார்த்துத் தேவையான இடங்களில் செம்மையாக்கம் செய்யுங்கள்.
கூடுதல் தாள் எழுதுவதற்காக உங்களுக்குத் தேவையென்றால், எழுந்து நின்று காத்திருங்கள்! மேசை மீது தட்டி அழைப்பதும், இருமுவதும், செருமுவதும் ‘உஸ்’ என ஒலி எழுப்பி அழைப்பதும், கால்களைத் தரையில் தேய்த்து ஒலி எழுப்பிக் கவனத்தை ஈர்க்க முனைவதும் இடக்கையால் அலட்சியமாகத் தாளை வாங்குவதும் செய்யத்தகாத அநாகரிகச் செயல்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.