எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில் அரசுப் பொருட்காட்சியை மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் திறந்து வைத்து 27 பயனாளிகளுக்கு இலவச பட்டா மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியினை வழங்கினார்.
கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பேசும்போது தெரிவித்ததாவது,
அரசுப் பொருட்காட்சி மாநில அரசின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சி மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதுடன் மட்டுமல்லாமல் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. ஆண்டு ஒன்றிற்கு 10 அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பொருட்காட்சி கோயம்புத்தூர், மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் 4 மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுழற்சி முறையில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள் அரங்கம் அமைப்பதற்கு ஏதுவாக துறை ஒன்றிற்கு ரூ.66,000ஃ- வழங்கப்பட்டு வந்த நிதி தற்போது உயர்த்தப்பட்டு ரூ.70,000ஃ- ஆக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இதற்கு முன்னர் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. காரைக்குடியில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சி 187-வது பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டு திட்டங்களை பெறுவதற்கு வழிமுறைகளை அறிய எளிமையாக அமையும் எனத் தெரிவித்தார்.
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
காரைக்குடியில் இன்று அரசுப் பொருட்காட்சி 187-வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட்காட்சியின் நோக்கம் என்னவென்றால், சிவகங்கை மாவட்டம் பலதரப்பட்ட சிறப்புகள் வாய்ந்த மாவட்டமாகும். சிவகங்கை மாவட்டம் 17-ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் சமஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. 1984-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தினை பிரித்து 15.03.1985 முதல் தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது. இங்கு காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில், குன்றக்குடி முருகன் கோவில் ஆகியத் திருக்கோவில்கள் பிரசித்துப் பெற்றவை. காரைக்குடி செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட காரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியம் மிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்குடி செட்டிநாடு சமையலுக்கு புகழ் பெற்றது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் அமையப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களுக்கு நினைவுக்கூறும் விதமாக திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி கண்ட முதல் பெண்மணி ராணி வீரமங்கை வேலுநாச்சியார். அவரது நினைவாக சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலிக்கு நினைவுச் சின்னமும் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள்.
கவியரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் காரைக்குடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குன்றக்குடியில் தெற்கு ரத வீதியில் ஆன்மீகத்தை போற்றும் வகையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்காட்சியில் 27 அரசுத் துறைகள், 2 அரசு சார்பு நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் உட்பட 13 கடைகள் இடம் பெறுகின்றன. நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ஃ-ம், சிறியவர்களுக்கு ரூ.10ஃ-ம், மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5ஃ-மாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற 184 அரசுப் பொருட்காட்சியின் வாயிலாக அரசுக்கு ரூ.37 கோடியே 65 லட்சத்து 18 ஆயிரம் நிகர வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் 14.09.1994 அன்று அரசுப் பொருட்காட்சி நடைபெற்றது. தற்போது 187-வது அரசுப் பொருட்காட்சியாக 23 ஆண்டுகள் கழித்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகிறது. இப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அனைவரும் அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் வாயிலாக நலத்திட்டங்களை பெறுவது குறித்து விவரங்களை நன்கு அறிந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பிஆர்.செந்தில்நாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) திரு.உல.ரவீந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.து.இளங்கோ, மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஊடகப் பிரிவினர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரண்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
16 Oct 2025ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார