எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 6.30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு பின்வருமாறு:-அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ., சாத்தான்குளத்தில் 8.4 செ.மீ. அளவில் மழை பெய்தது.
மேலும் இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் 5.6 செ.மீ., குலசேகரன்பட்டினத்தில் 5.5 செ.மீ., ஓட்டப்பிடாரத்தில் 5.4 செ.மீ., தூத்துக்குடி மாநகரில் 4.2 செ.மீ., வேடநத்தத்தில் 4.5 செ.மீ., கழுகுமலை மற்றும் வைப்பார் பகுதிகளில் 3.2 செ.மீ., கோவில்பட்டியில் 3.1 செ.மீ., மணியாச்சியில் 3 செ.மீ., கீழஅரசடியில் 2.5 செ.மீ., கயத்தாறு 1.8 செ.மீ., கடம்பூர் மற்றும் சூரன்குடி பகுதிகளில் 1.7 செ.மீ., எட்டயபுரத்தில் 1.6 செ.மீ. மற்றும் விளாத்திகுளத்தில் 8 மி.மீ., காடல்குடி 7 மி.மீ. என்ற அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 87.08 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. அதாவது சராசரியாக 4.58 செ.மீ. அளவில் மழை பெய்துள்ளது. தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பெரைரா தெரு, சின்ன கடை தெரு மத்திய பாகம் காவல் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
சந்தை ரோட்டில் உள்ள எஸ்பிஜி கோவில் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இந்த தெருவில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால். அங்கே தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த தெரு முழுவதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்ததால் அங்கு வரக்கூடிய மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மேம்படுத்துவதில் அதிகாரிகள் சரிவர செயல்படாத காரணத்தால், ஒரு நாள் மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடந்து கனமழை பெய்தது. திருச்செந்தூர் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் விலகல்?
17 Nov 2025மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
-
65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
18 Nov 2025சென்னை: 65 ஆண்களுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விக்டோரியா பப்ளிக் ஹாலை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞர் சடலம் மீட்பு- பரபரப்பு
18 Nov 2025சென்னை: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே இளைஞரின் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலி
18 Nov 2025திண்டுக்கல்: அய்யப்ப பக்தர்கள் சென்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
18 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
-
துணை ஜனாதிபதியுடன் ஜெக்தீப் தன்கர் சந்திப்பு
18 Nov 2025டெல்லி: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் சந்தித்து பேசினார்.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு: உமரின் பழைய வீடியோ வெளியாகி பரபரப்பு
18 Nov 2025புதுடெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக பயங்கரவாதி உமரின் பழைய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திரா: 6 மாவோயிஸ்டுகள் டுகொலை
18 Nov 2025விசாகப்பட்டினம்: ஆந்திராவில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 6 மாவோயிஸ்டுகள் படுகொலை செய்யப்பட்டனர்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.


