எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், லடாக் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து எதுவும் தெரியாது என்று சீன நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் லடாக் பகுதியில் பங்கோங் என்ற ஏரி உள்ளது இந்த ஏரியின் கரை பகுதியில் சீன ராணுவத்தினர் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி நுழைந்தனர். அதை இந்திய ராணுவத்தினர் பார்த்து தடுத்து நிறுத்தி சீன ராணுவ வீரர்களை விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீன வீரர்கள், இந்திய வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். பதிலுக்கு இந்திய வீரர்கள் சேர்ந்து சீன வீரர்கள் மீது கற்களை வீசினர். இதில் இருதரப்பிலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சீன நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவா சன்யிங்கிடம் நிருபர்கள் கேட்டதற்கு, இந்தியாவின் பங்கோங் ஏரி கரை பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி எங்கள் நாட்டு ராணுவம் நுழைந்தது குறித்து தெரியாது என்றார். எல்லைப்பகுதியில் அமைதி காக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்திய எல்லையையொட்டிய பகுதியில் அமைதி காப்பதில் எங்கள் நாட்டு ராணுவம் உறுதியாக உள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் எங்கள் ராணுவம் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் கட்டுப்பாடுடன் இருக்கும்படி இந்திய ராணுவத்தையும் கேட்டுக்கொண்டுள்ளோம். இருநாட்டு மரபுகளையும் கடைப்பிடிக்கும்படி கூறியுள்ளோம். இந்த மாதிரியான ஊடுருவல் சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் எங்கள் ராணுவம் எல்லையை பாதுகாத்து வந்துள்ளது. இரு நாடுகளிடையே எல்லைப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. பிரச்சினைக்கு தீர்வுகாண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்டு சிறப்பு குழுவினர்களும் இதுவரை 19 முறை சந்தித்து பேசியுள்ளனர் என்று ஹூவா மேலும் கூறியுள்ளனர்.
டோக்லம் பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஹூவா, எங்கள் பகுதியை இந்திய ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அதனால் முதலில் இந்திய ராணுவம் வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இருந்தபோதிலும் டோக்லம் மோதலுக்கு தீர்வுகாண தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று சீனா தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது அனைத்துலக வள்ளலார் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Feb 2026சென்னை, அன்பு வழியை போதித்த வள்ளலார் வழியில் ஏழை எளிய மக்களுக்காகவே தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
16 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள் அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்
16 Feb 2026சென்னை, பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
-
கேரளாவில் உறுப்பு தானம் மூலம் 5 பேரை வாழவைத்த 10 மாத பெண் குழந்தைக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
16 Feb 2026திருவனந்தபுரம், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இ
-
சூடானில் துணை ராணுவம் தாக்குதல்: பொதுமக்களில் 6 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. குற்றச்சாட்டு
16 Feb 2026கார்டும், துணை ராணுவப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் ஒரே வாரத் தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை
-
விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
16 Feb 2026அமராவதி, விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஆந்திரா அரசுக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இருப்பது உண்மைதான்: வேற்றுக்கிரகவாசிகள் குறித்து பராக் ஒபாமா பரபரப்பு தகவல்
16 Feb 2026நியூயார்க், வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
-
விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர்
16 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் தென்காசி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் இணைந்தார்.
-
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்
16 Feb 2026புதுடெல்லி, நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.


