எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.
தீபத்திருவிழா
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர் (பொது) ந.திருமகள், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.இராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், தாசில்தார் ஆர்.ரவி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் புருஷோத்குமார், தனி அலுவலர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, அமைச்சர் கோயில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
மேலும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக ஈசான்ய லிங்கம் கோயில் அருகில் அண்ணாமலையார் திருக்கோயில் வைப்பு நிதியிலிருந்து பொதுப்பணித்துறை (கட்டடங்கள்) மூலமாக 3.76 ஏக்கர் நிலப்பரிப்பில் ரூ.28 கோடி மதிப்பீட்டில் யாத்ரி நிவாஸ் கட்டப்படவுள்ள இடத்தினை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த யாத்ரி நிவாஸில் பக்தர்கள் தங்கும் அறைகள், குடில்கள், உணவகம், வாகன ஓட்டுனர்கள் தங்கும் அறைகள், சலவை, குடிநீர், கழிவறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் சிறிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை கட்டப்படவுள்ளது. மேலும், இந்த யாத்ரி நிவாஸ் கட்டடம் சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட உள்ளது சிறப்பம்சமாகும்.
அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், ‘உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 2ந் தேதி விடியற்காலை 4 மணியளவில் கோவிலில் பரண தீபமும், மாலை 6 மணியளவில் கோவில் பின்புறமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரியும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தீபத்திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு என்ன தேவைகள் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்’ என்றார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கூடுதல் ஆணையர் (பொது) ந.திருமகள், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகன்னாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, துணை ஆட்சியர் (பயிற்சி) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரம்: பெலாரஸ் எல்லையை மூடிய லித்துவேனியா
15 Nov 2025வில்னியஸ், தங்கள் எல்லைக்குள் மர்ம பலூன்களை பறக்கவிட்ட விவகாரத்தை அடுத்து பெலாரஸ் எல்லையை மூடியது லித்துவேனியா.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது: ராகுல்
15 Nov 2025பாட்னா, பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியமளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லியில் காற்று மாசு; சுப்ரீம் கோர்ட் கவலை
15 Nov 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசு குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ள நிலையில், காற்று மாசு வழக்கில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராக அறிவுறுத்தியுள்ளது
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் : அமெரிக்க அதிகாரி தகவல்
15 Nov 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம்; அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்: ஒருவர் கைது
15 Nov 2025சென்னை சென்னை விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்தனர்.
-
வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் பலி
15 Nov 2025ஹனோய், வியட்நாமில் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.



