முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

சென்னை, டி.டி.வி.தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

திமுக தலைமையில் கட்சிகள் இணைந்து செயல்படுவது அரசை வீழ்த்தவே. எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.  டி.டி.வி.தினகரனுடன் எந்த சமரச முயற்சியும் கிடையாது. ஹவாலா மூலம் ரூ.20 நோட்டு கொடுத்து வெற்றிபெற்ற மமதையில் தினகரன் உள்ளார். ஜனநாயகத்தை பற்றி பேச தினகரனுக்கு தகுதியில்லை.

ஸ்டாலினுடன் சேர்ந்த காரணத்தினால், 6 பேரை நீக்க வேண்டுமென தினகரன் பேசுகிறார். தினகரன் வாயிலேயே வடை சுடுகிறார் இவ்வாறு அவர் கூறினார். சுய வேலைவாய்ப்பு என்பது ஊக்கப்படுத்த வேண்டிய ஒன்று என  பக்கோடா குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து