எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அருகில் 49 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை குவைத் நிறுவனம் அமைக்கிறது என்றும் தொழில் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே முதலீடுகளை மிக அதிக அளவில் ஈர்க்கும் ஒரு மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகிய முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் இந்த அரசு தனிக்கவனம் செலுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பின்னர், முதல்வரின் நேரடி ஈடுபாட்டினாலும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறை பயணத்தினாலும், பல புதிய முதலீடுகளை இம்மாநிலம் ஈர்த்துள்ளது. ஜனவரி மாதம் 2020-ம் ஆண்டில், 32,405 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், 52,075 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாளது தேதி வரையில், தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சார்ந்த அல் கெப்லா அல் வட்யா குழுமம், தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை 49,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கும். இந்த முதலீடு, அதைச் சார்ந்த உப தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க பயன் அளிப்பதுடன், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெருமளவு வேலைவாய்ப்பினையும் உருவாக்கும். பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு தகுந்தவாறு முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க, புதிய தொழில் கொள்கையை, தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும். மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாட்டை மின்சார வாகனங்கள், உதிரி பாகங்கள், மின்ஏற்று உபகரணங்கள் தயாரிப்பு மையமாக உருவாக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுடன், மிகவும் முற்போக்கான, தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை, 2019ம் ஆண்டில் அரசு வெளியிட்டது. பயிர் செய்யத் தக்க நிலங்களின் பரப்பு, தொழில் வளர்ச்சியினால் பாதிப்படையக் கூடாது என்பதனால், தொழில்துறை உபயோகத்தில் உள்ள நிலங்களின் நிலப் பயன்பாட்டை மேம்படுத்த, மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான தரைதள குறியீடு ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும் மற்றும் மனை பரப்பளவு 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை–பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்திற்கும், பங்குதாரர்களின் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை–கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். காட்டுப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பின்டெக் சிட்டி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ஏறத்தாழ 33,775 ஏக்கர் பரப்பளவில் 23 தொழில் வளாகங்கள், 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது. மொத்தம் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 6.48 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், 2,631 தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4,457 ஏக்கர் நிலம் உடனடி ஒதுக்கீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழிற்பூங்காக்களில் தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத மனைப் பரப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, உள்குத்தகை கட்டணம் மற்றும் நிர்வாக மாற்ற கட்டணம் ஆகியவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16,725 ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் தொழிற்பூங்காவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதியுதவியுடன், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். 34.81 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிறுவும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும், ஹெச்.எல்.எல் லைப் கேர் நிறுவனமும் இணைந்து 205 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டிற்கு அருகில் ஒரு மருத்துவப் பூங்காவை நிறுவிட உத்தேசித்துள்ளன. மொத்தம் 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய சிமெண்ட் ஆலையை அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் தொடங்கி, தற்போதைய உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு, செலவு திட்டத்தில் தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை



