முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சம்பரான் : பீகாரில் கூட்டு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டதுடன் உயர்ரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

பீகாரின் பச்சிம் சம்பரான் மாவட்டத்தில் பகாகா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனர் என தகவல் கிடைத்து, சகஸ்திரா சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதில் கூட்டு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  சகஸ்திரா சீமா பால் படையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார்.

கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏ.கே. 56 ரக துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கி உள்ளிட்ட உயர்ரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து