முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரின் தாயார் மரணம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் டாக்டர் நிர்மலா அருள் பிரகாஷின் தாயார் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காக போராடிய பெருந்தகைகளான அயோத்திதாஸ் பண்டிதர் மற்றும் ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரது பேத்தியும், அ.தி.மு.க இலக்கிய அணி துணை செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான டாக்டர் நிர்மலா அருள் பிரகாஷின் தாயாருமான உமா கணேஷ் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் டாக்டர் நிர்மலா அருள் பிரகாஷூக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் உமா கணேசின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து