முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு : ஒரே நாளில் 3,924 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,22,011-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

தமிழகத்தில் தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 2,608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,22,011 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,87,388 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 3,924 பேர் குணமடைந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் பலி எண்ணிக்கை 11,091 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 723 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 199173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்

இதுவரை 98,85,443 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 77,356 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 202 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 23,532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,35,783 பேர் ஆண்கள், நேற்று மட்டும் 1,568 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,86,196 பேர் பெண்கள், நேற்று மட்டும் 1,040 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.   

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,711 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து