முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
School 2023 04 07

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 545 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ - மாணவியரும், இதுதவிர தனித்தேர்வர்களாக 27 ஆயிரத்து 783 பேரும், சிறைத்தேர்வர்களாக 281 பேரும் பிளஸ் 2 வகுப்புக்கான தமிழ் பொதுத்தேர்வு எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.15 மணிக்கு தொடங்கிய பொதுத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் பள்ளி மாணவர்கள் 8 ஆயிரத்து 319 பேரும், தனித்தேர்வர்கள் 1 ஆயிரத்து 600 பேரும் என மொத்தம் 9 ஆயிரத்து 919 பேர் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து