முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கும்,  ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.  ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியிடம் உயர்மட்டக்குழு விளக்கம் அளித்தனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்வது மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து