முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்றால் முன்னாள் எம்.பி. பலி

செவ்வாய்க்கிழமை, 27 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினரும், பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலியானார். அவருக்கு வயது 70. 

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், 14-வது மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர் கருணா சுக்லா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பலியானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த கருணா சுக்லா முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உறவினராவார். கடந்த 2013-ம் ஆண்டு பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய அவர் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் பா.ஜ.க.வின் லகான் லால் சாஹுவால் தோற்கடிக்கப்பட்டார். கருணா சுக்லாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து