முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா மரணங்களுக்‍கு மத்திய அரசு பொறுப்பேற்காதது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி

சனிக்கிழமை, 1 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு எவ்வித பொறுப்பும் ஏற்கவில்லை என ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் உச்சத்தை தொட்டு வருகிறது. உலகளவில் கொரோனா மரணங்களில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும், பிரான்ஸ் 4-ம் இடத்திலும், துருக்கி 5-ம் இடத்திலும் உள்ளன. 

இந்நிலையில் கொரோனா மரணங்களுக்‍கு மத்திய அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில்  பதிவிட்டுள்ள அவர், 

கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு எவ்வித பொறுப்பும் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளார். சிகிச்சை பற்றாக்குறையால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வரும் நாட்டு மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரகரமான சூழ்நிலையில் நீங்கள் தனியாக இல்லை.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் உங்களுடன் உள்ளன. நாம் ஒன்றாக இருந்தால் நம்பிக்கை இருக்கும் என்றும் அதில் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து