முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை: 24 நோயாளிகள் பலி

திங்கட்கிழமை, 3 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சாம்ராஜ்நகர் : கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாம்ராஜ்நகர் அரசு மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் சாம்ராஜ்நகர் அரசு மாவட்ட மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 144 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் மருத்துவ ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து