முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சலுகைகள் : மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 25 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சலுகை அளிக்க மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, தமிழகம், டெல்லி, மகராஷ்டிரா, கேரளா, ம.பி., உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பல துறைகள் முடங்கி உள்ளன. 

இந்நிலையில், அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனாவின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு சலுகை வழங்கும் திட்டம் உள்ளது. இதற்கான ஆலோசனை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இதனால், எப்போது அறிவிப்பு வெளியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து