முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் 12- ஆம் தேதி நீட் தேர்வு மத்திய கல்வித்துறை மந்திரி அறிவிப்பு

திங்கட்கிழமை, 12 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கொரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை ( NTA ) இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 198 -நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து