முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்தியதில் சாதனை படைத்த இந்தியா : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசிகள்: 58 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:;

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 58 கோடியைக் கடந்து மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. நேற்று  காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 64,39,411 முகாம்களில் 58,14,89,377 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 52,23,612 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 152 நாட்களுக்குப் பிறகு 3,53,398 ஆக சரிந்துள்ளது.

இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.09 சதவீதம் மட்டுமே ஆகும். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.00 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.95 சதவீதமாகவும் நேற்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 27 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 76 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து