முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து பெண்களை காதல் வலையில் வீழ்த்துவோர் மீது கடும் நடவடிக்கை: குஜராத் முதல்வர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 11 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

அகமதாபாத் : பசுவதை செய்வோர் மீதும், இந்து பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார்.

அகமதாபாத்தின் புறநகரில் உள்ள ரபாரி சமூகத்தின் (கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட வர்கள்) உறுப்பினர்களுக்காக அமைக்கப்படும் பயிற்சி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில்  முதல்வர் ரூபானி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, 

பசுக்களைக் காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதை கடுமையாக நடைமுறைப்படுத்த போவதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து