முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா காலத்தில் எங்கள் நாட்டிற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : செர்பியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சில்கோவிக் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கரை டெல்லியில் இன்று சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது இந்தியா-செர்பியா இடையேயான உறவை வலுப்படுத்துவது, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர், செர்பிய வெளியுறவுத்துறை மந்திரி நிக்கோலா சில்கோவிக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா காலத்தில் செபியாவுக்கு உதவி செய்த இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், தடுப்பூசி உள்பட கொரோனா காலத்தில் இந்திய அரசு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எங்கள் நாட்டிற்கு செய்த உதவிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து