முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை ஆவினில் வாங்கக்கோரி அரசு துறைகளுக்கு தலைமை செயலாளர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 26 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது., 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின் நிறுவனம்) தினம் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ளுர் விற்பனை போக, 27 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலாகவும், மீதமுள்ள ஆவின் பால் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களையும் உயர்ந்த தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகின்றது. அவ்வகையில் 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.10.2021 அன்று புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் துறை சார்பில் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலகக் கூட்டங்களில் இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து