முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக வலுக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிசம்பர் 2-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

அந்தமான் கடலின் மத்திய பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 2-ம் தேதியான இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுவடையும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை டிசம்பர் 4-ம் தேதி காலைக்குள் சென்றடைய வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக டிசம்பர் 1-2 தேதிகளில் அந்தமான் & நிகோபார் தீவுகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்; டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வடக்குக் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பரவலாக கன மழை பெய்யும். நாளை (டிசம்பர் 3-ம் தேி ) முதல் 5-ம் தேதி வரை பரவலாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப்பகுதிகளில் மழை பெய்யும்.

டிசம்பர் 4 -ம் தேதி கடலோர ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவில் குறிப்பிட்டப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து தெரிவிக்கையில்.,

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்தது. நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக அது மாறியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அது புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயல் சின்னம் இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னத்தால் தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (3-ம் தேதி) இந்த புயல் சின்னம் புயலாக மாற உள்ளது. அப்போது அதன் சீற்றம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலில் கொந்தளிப்பு காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் பெயர் “ஜாவத்”

நாளை (3-ம் தேதி) உருவாகும் புயலுக்கு “ஜாவத்” என்று பெயர் சூட்டப்பட உள்ளது. இது சவுதிஅரேபியா வழங்கிய பெயராகும். புயலுக்கான பட்டியலில் அடுத்த இந்த பெயர்தான் இடம் பெற்றுள்ளது. ஜவாத் என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். ஜாவத் புயல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து