முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரு மாநில போலீஸார் தேடுதல் வேட்டை: தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : இரு மாநில போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலங்கானா - சத்தீஸ்கர் மாநில எல்லையில் பேரூரு, இல்மாட்டி, ஊசூரு ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் சீனியர் மாவோயிஸ்ட் சுதாகர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரு மாநில போலீஸாரும் அந்தப் பகுதிகளுக்கு ஆயுதங்களுடன் சென்றனர். அங்கு சுமார் 3 நாட்களாக மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தெலங்கானா எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் அதிகாலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. வெகுநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உட்பட 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் வாரங்கல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து