தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
14 ஆட்டங்களில்...
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 64 போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
குஜராத் முதல் அணி...
குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 20 புள்ளியுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு உள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 4 தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.
ராஜஸ்தான், லக்னோ...
ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் 2-வது இடத்திலும், லக்னோ 3-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் +0.304 ஆகவும், லக்னோ அணியின் ரன் ரேட் +0.262 ஆக இருக்கிறது. 14 புள்ளியுடன் இருக்கும் பெங்களூர் அணியின் ரன் ரேட் 0.323 ஆக இருக்கிறது. இதன் காரணமாக ராஜஸ்தான், லக்னோ அணிகள் பிளேஆப் சுற்றுக்கு கிட்டதட்ட தகுதி பெறுவது உறுதியாகி விட்டது.
5 அணிகள் போட்டி...
ராஜஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் சி.எஸ்.கே.வையும், லக்னோ அணி கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவையும் சந்திக்கின்றன. தற்போதுள்ள நிலையில் 5 அணிகளால் மட்டுமே 16 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற முடியும். பிளேஆப் சுற்றின் ஒரு இடத்துக்கு 5 அணிகள் போட்டியில் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் காத்திருக்கின்றன.
3 அணிகள் இடையே...
16 புள்ளிகள் வரை வந்தால் பெங்களூர், டெல்லி அல்லது பஞ்சாப் இடையே மட்டுமே போட்டி நிலவும். 14 புள்ளிகள் வரை அளவு வந்தால் மட்டுமே 5 அணிகள் இடையே போட்டி நிலவும். பெங்களூர் அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. நிகர ரன் ரேட்டில் மோசமாக இருப்பதால் அந்த அணி குஜராத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டும். தோற்றால் பிளேஆப் சுற்றில் நுழைவது மிகவும் கடினமாகிவிடும். அடுத்த அணிகள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
காத்திருக்க வேண்டும்...
12 புள்ளியுடன் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் எஞ்சிய ஆட்டங்களில் பஞ்சாப், மும்பை (21ம் தேதி), அணிகளுடன் மோதுகின்றன. அந்த அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் இந்த 2 ஆட்டங்களிலும் வென்றால் தகுதி பெற்றுவிடும். இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். பஞ்சாப் அணியும் இதே நிலையில் இருக்கிறது. ஆனால் டெல்லியை விட நிகர ரன் ரேட்டில் குறைவாக உள்ளது. டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளேஆப் சுற்று வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோல்வி அடையும் அணிக்கு வாய்ப்பு குறையும்.
பிளே ஆப் வாய்ப்பு...
கொல்கத்தா, ஐதராபாத் அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் வரை மட்டுமே பெற இயலும். பெங்களூர், டெல்லி, பஞ்சாப் அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெற இருந்தால் மட்டுமே இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளுக்கு பிளே ஆப் சுற்று வாய்ப்பு என்பது மிக கடினமாகும். 12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா கடைசி ஆட்டத்தில் லக்னோவை 18-ந் தேதி சந்திக்கிறது. 10 புள்ளியுடன் இருக்கும் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த அணி மும்பையை நாளையும், 22-ந் தேதி பஞ்சாப்பையும் எதிர் கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 19 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-07-2022.
02 Jul 2022 -
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
மீண்டும் ஷிகர் தவான் தேர்வு: இங்கிலாந்து எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
01 Jul 2022மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
01 Jul 2022சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல விதமான சவால்களை சந்தித்தோம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
01 Jul 2022புதுடெல்லி : நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவ
-
விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு
01 Jul 2022மும்பை : தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
01 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறது.
-
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்
01 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கேப்டன் பொறுப்பு குறித்து நினைவுகளை பகிர்ந்த பும்ரா
01 Jul 2022எட்ஜ்பாஸ்டன் : இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என டோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா
-
தமிழக அரசு உருவாக்கியது மாநில அணை பாதுகாப்பு அமைப்பு
01 Jul 2022சென்னை : மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
உதய்பூர் படுகொலை தொடர்பாக டி.ஜி.பி உள்ளிட்ட 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
01 Jul 2022உதய்பூர் : உதய்பூரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தால் சட்ட ஒழுங்கின் மேல் எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து மாநில காவல்துறை தலைவர் உள்பட மூத்த ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் 32 ப
-
சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜி.எஸ்.டி நாள் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
01 Jul 2022சென்னை : சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.44 லட்சம் கோடி ரூபாய் : மத்திய நிதித் துறை அமைச்சகம் தகவல்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வச
-
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
01 Jul 2022சென்னை : ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க.
-
உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது
01 Jul 2022முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
-
ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு
01 Jul 2022புதுடெல்லி : மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார
-
சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய வரி சீர்திருத்தம் : பிரதமர் நரேந்திர மோடி டுவிட்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவ