முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள்: சோனியா, பிரியங்கா, ராகுல் மரியாதை

சனிக்கிழமை, 21 மே 2022      இந்தியா
Sonia 2022-05-21

Source: provided

புதுடெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகள் பிரியங்கா, மகன் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது 31-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வீர் பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து