முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகாலயாவில் கனமழை, நிலச்சரிவு: 8 பேர் பலி - 40 ஆயிரம் பேர் பாதிப்பு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      இந்தியா
Meghalaya-rain 2022-06-22

Source: provided

கரோமலை : மேகாலயாவின் தெற்கு கரோமலை மாவட்டத்தில் நேரிட்ட கடும் நிலச்சரிவால் 4 நாட்களாக 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மேகாலயாவில் பெய்த கனமழையை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு கரோமலை மாவட்டம், மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 6 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

நிலச்சரிவில் சிக்கி 4 வயது குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு கரோமலை மாவட்டமும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு நேரில் சென்ற மேகாலயா முதலமைச்சர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தை ஆய்வு செய்தார். அதனை சீரமைப்பது தொடர்பாகவும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இரு மாவட்டங்களிலும் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து