முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. உண்ணாவிரதம்: சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் அனுமதி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

சென்னை : பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு சென்னையில் ஒரு இடத்தில் மட்டும் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 

தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை  சுட்டிக்காட்டி இன்று (5-ம் தேதி) அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் சென்னையில் 7 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். 

வடசென்னை மாவட்டத்தில் கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரதம் இருக்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு இருந்தார். ஆனால் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதே போல் வட சென்னை மேற்கு, தெற்கு, வடகிழக்கு, மத்திய சென்னை கிழக்கு, மேற்கு, தென்சென்னை, தென்சென்னை கிழக்கு, ஆகிய 7 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் போராட்டத்தை நடத்தும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. பாதுகாப்பு, போக்குவரத்து பிரச்சினைகளால் ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  

இதையடுத்து வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்று (செவ்வாய்கிழமை) சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே மட்டுமே உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் அண்ணாமலை பங்கேற்கிறார். மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்த அந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து