முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் : சிவ, சிவா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2022      ஆன்மிகம்
Natarajar-temple 2022-07-05

Source: provided

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 27-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

28-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 29-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 30-ம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும், கடந்த 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4 -ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடந்தது.

முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட கோவிலில் இருந்து தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா என்ற முழக்கத்துடன்  நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர்களுக்கு முன்னால் சிவ வாத்தியங்கள் முழங்கிட சிவ பக்தர்கள் ஆடியபடியே சென்றனர். ஓதுவார்கள் தேவாரம் திருவாசகம் ஓதியபடியே சென்றனர். கீழ வீதி வடக்கு வீதி மேலவீதி தெற்கு வீதி ஆகியவற்றில் கட்டளைதாரர்கள் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு படையல் செய்தனர். மேல வீதி வடக்கு வீதியும் இணையும் பகுதியில் பருவத ராஜ குல மரபினர் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு பட்டுப் போர்த்தி படையல் செய்தனர் தீபாராதனை காட்டப்பட்டது.

சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று 6-ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. 

பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை 7-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து