எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 27-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
28-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 29-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 30-ம் தேதி வெள்ளி பூதவாகனத்தில் சாமி வீதி உலாவும், கடந்த 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும் (தெருவடைச்சான்), 2-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 3-ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதிஉலாவும், 4 -ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடந்தது.
முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேளதாளம் முழங்கிட கோவிலில் இருந்து தனித்தனி தேரில் எழுந்தருளினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ சிவா என்ற முழக்கத்துடன் நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்களுக்கு முன்னால் சிவ வாத்தியங்கள் முழங்கிட சிவ பக்தர்கள் ஆடியபடியே சென்றனர். ஓதுவார்கள் தேவாரம் திருவாசகம் ஓதியபடியே சென்றனர். கீழ வீதி வடக்கு வீதி மேலவீதி தெற்கு வீதி ஆகியவற்றில் கட்டளைதாரர்கள் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு படையல் செய்தனர். மேல வீதி வடக்கு வீதியும் இணையும் பகுதியில் பருவத ராஜ குல மரபினர் ஸ்ரீ நடராஜர் ஸ்ரீ சிவகாமி அம்மனுக்கு பட்டுப் போர்த்தி படையல் செய்தனர் தீபாராதனை காட்டப்பட்டது.
சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று 6-ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. நாளை 7-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : தொழில்துறையில் ஈட்ட முதலீடுகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்த அ.தி.மு.க.
-
சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம்
17 Oct 2025சென்னை : தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து 12 லட்சம் பேர் பயணம் செய்தனர்.