முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலி முகத்திடலை விட்டு வெளியேறுங்கள்: போராட்டக்காரர்களுக்கு இலங்கை அரசு கெடு

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
Srilanka 2022 08 04

காலி முகத்திடலை விட்டு இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற போராட்டக்காரர்களுக்கு இலங்கை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் தப்பி விட்டார். அதை தொடர்ந்து அவர்  மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று பின்னர், மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். 

புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்குள்ள காலி முகத்திடலிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காலி முகத்திடலை விட்டு இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற இலங்கை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இன்று மாலைக்குள் வெளியேறாத போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து