முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அளவுக்கு அதிகமாக உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Silenthra-Babu 2021 09 24

Source: provided

சென்னை : தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார் 

தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பிக்கள் மகேஷ் குமார் அகர்வால் ஏ.டி.ஜி.பி. சங்கர் ஐஜி லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மாவட் எஸ்.பி. அளவில் இருந்து ஏ.டி.ஜி.பி., டி.ஜி.பி. வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார் .

இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து