எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த அவசரம் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டாம் தேதி தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு.
ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், “18-ம் தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம், அதே நாளில் அவருடைய பெயரைப் பிரதமர் பரிந்துரைக்கிறார். ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம். உங்கள் ஆவணங்கள் படி பார்த்தால் தேர்தல் ஆணையர் பதவி மே 15 முதல் காலியாக உள்ளது. மே 15 முதல் நவம்பர் 18 வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா?. ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்?” என அடுக்கடுக்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சில பதவிகளை நிரப்புவதற்கு அதிவிரைவாக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம், ஆனால் மே மாதத்தில் இருந்து காலியாக இருக்கக்கூடிய பதவியை திடீரென இவ்வளவு அவசரமாக நிரப்ப வேண்டியது ஏன் என மீண்டும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி பார்த்தால், தேர்தல் ஆணையர் பதவிக்கு நான்கு பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது, இந்த நான்கு பெயரின் பரிந்துரையை எப்படி மேற்கொண்டீர்கள்?, அதில் ஒருவரை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்பதை நாங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம், இந்த கட்டமைப்பு பற்றி எங்களுக்கு மிகவும் அக்கறை இருக்கிறது என நீதிபதிகள் கூறினர்.
எந்த ஒரு தனிப்பட்ட நபர் குறித்தும் நாங்கள் எதிராக கருத்து கூறவில்லை, உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவராக இருக்கிறார். ஆனால் எங்களது கவலை தேர்ந்தெடுக்கும் முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து தான் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர் தான் மிகவும் இளையவர். அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என நீதிபதிகள் கூறியபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இதற்கென்று உள்ள தனி இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதனை பார்க்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள், தேர்தல் ஆணையர்களின் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள், ஆனால் விரைவாகவே ஓய்வுபெற போகக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள், இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர்.
பனி மூப்பு, ஓய்வு பெறும் வயது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியபோது, அந்தப்பதிலில் நீதிபதிகள திருப்தி அடையாமல் இருந்தனர். எங்களது கேள்விக்கு நீங்கள் இப்பொழுதும் நேரடியான பதிலை தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் நபர்கள் ஆறு ஆண்டுகள் முழுமையான பதவியில் இருக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நபராக நீங்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை, தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையருடைய சம அளவில் இன்னும் சொல்லப்போனால் அவரைவிட பனி மூப்பு அதிகம் உள்ள நபர்கள் பலரது பெயர்கள் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது, இந்த குறிப்பிட்ட நபரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விஷயம் மிகவும் மர்மமானதாக இருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.
அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், “அவர்கள் எந்த ஆண்டு அதிகாரி என்பது முதல் விஷயம். அவர்களது பிறந்த தேதி இரண்டாவது விஷயம். அந்த குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது மற்றும் பணியில் அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமான விஷயம்” என தெரிவித்த போது நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு முறை கேட்கிறோம், நான்கு பேரின் பெயர்களை எப்படி நீங்கள் பரிந்துரையின் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.
அதற்கு மீண்டும் பழைய பதிலையே தலைமை வழக்கறிஞர் தெரிவித்தபோது, ஆறு ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை, நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது பிரிவு 6-ஐ மீறுவதாக இருக்கிறது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தன் தரப்பு வாதங்களை நிறைவு செய்ததற்குப் பிறகு மனுதாரர்கள் சார்பில் பிரசாத் பூஷன் மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியாயமான சட்டத்தின் படி ஆறு ஆண்டுகள் என்பது இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது ஏன்?. இப்படி இருந்தால் இந்த அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக இயங்குகிறது என்பதை எப்படி நம்புவது என கேள்வி எழுப்பினர்.
இதனை சரி செய்வதற்கு தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி தெளிவாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு தீர்ப்பு தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து
16 Sep 2025ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
காசா மீதான ராணுவ விரிவாக்கம்: பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
16 Sep 2025காசா : காசா மீதான ராணுவ விரிவாக்கம் தொடர்பாக பாலஸ்தீனர்கள் வெளியேற இஸ்ரேல் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா, ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
வடகொரியாவில் ஆங்கில சொற்களை பயன்படுத்த தடை
16 Sep 2025வடகொரியா : ஆங்கில சொற்களை உச்சரிக்க அந்த நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்க விலை
16 Sep 2025சென்னை : மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இந்தியாவில் பார்வையற்றோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை நடக்கிறது
16 Sep 2025மும்பை : பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் கனமழை
16 Sep 2025சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை பெய்ததால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
-
ஒரு நாளில் 2 மாவட்டங்களில் மட்டும் தனது சுற்றுப்பயண திட்டத்தை மாற்றினார் த.வெ.க. தலைவர்.
16 Sep 2025சென்னை : சுற்றுப்பயண திட்டத்தை த.வெ.க. தலைவர் விஜய் மாற்றி அமைத்துள்ளார்.
-
தமிழகத்திற்கு தற்போது தேவையான 1.54 லட்சம் டன் உரங்களை உடனே வழங்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Sep 2025சென்னை : தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வகையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக்