எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: அருண் கோயல் நியமனத்தில் ஏன் இந்த அவசரம் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் மிகவும் மர்மமானதாக இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டாம் தேதி தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தநிலையில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது மத்திய அரசு.
ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், “18-ம் தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம், அதே நாளில் அவருடைய பெயரைப் பிரதமர் பரிந்துரைக்கிறார். ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம். உங்கள் ஆவணங்கள் படி பார்த்தால் தேர்தல் ஆணையர் பதவி மே 15 முதல் காலியாக உள்ளது. மே 15 முதல் நவம்பர் 18 வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா?. ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்?” என அடுக்கடுக்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சில பதவிகளை நிரப்புவதற்கு அதிவிரைவாக முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்பதை நாங்கள் புரிந்து கொள்கின்றோம், ஆனால் மே மாதத்தில் இருந்து காலியாக இருக்கக்கூடிய பதவியை திடீரென இவ்வளவு அவசரமாக நிரப்ப வேண்டியது ஏன் என மீண்டும் அவர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களின்படி பார்த்தால், தேர்தல் ஆணையர் பதவிக்கு நான்கு பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது, இந்த நான்கு பெயரின் பரிந்துரையை எப்படி மேற்கொண்டீர்கள்?, அதில் ஒருவரை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்பதை நாங்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம், இந்த கட்டமைப்பு பற்றி எங்களுக்கு மிகவும் அக்கறை இருக்கிறது என நீதிபதிகள் கூறினர்.
எந்த ஒரு தனிப்பட்ட நபர் குறித்தும் நாங்கள் எதிராக கருத்து கூறவில்லை, உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நபர் சிறப்பான நிர்வாக திறமை கொண்டவராக இருக்கிறார். ஆனால் எங்களது கவலை தேர்ந்தெடுக்கும் முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து தான் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர் தான் மிகவும் இளையவர். அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என நீதிபதிகள் கூறியபோது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இதற்கென்று உள்ள தனி இணையதளத்தில் உள்ளது. யார் வேண்டுமானாலும் அதனை பார்க்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள், தேர்தல் ஆணையர்களின் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள், ஆனால் விரைவாகவே ஓய்வுபெற போகக்கூடிய நபர்களை தேர்தல் ஆணையர்களின் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள், இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர்.
பனி மூப்பு, ஓய்வு பெறும் வயது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் பெயர்கள் இறுதி செய்யப்படுகிறது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியபோது, அந்தப்பதிலில் நீதிபதிகள திருப்தி அடையாமல் இருந்தனர். எங்களது கேள்விக்கு நீங்கள் இப்பொழுதும் நேரடியான பதிலை தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கும் நபர்கள் ஆறு ஆண்டுகள் முழுமையான பதவியில் இருக்கும் நபராக இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய நபராக நீங்கள் யாரையும் தேர்ந்தெடுப்பதில்லை, தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையருடைய சம அளவில் இன்னும் சொல்லப்போனால் அவரைவிட பனி மூப்பு அதிகம் உள்ள நபர்கள் பலரது பெயர்கள் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது, இந்த குறிப்பிட்ட நபரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என மீண்டும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விஷயம் மிகவும் மர்மமானதாக இருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்.
அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர், “அவர்கள் எந்த ஆண்டு அதிகாரி என்பது முதல் விஷயம். அவர்களது பிறந்த தேதி இரண்டாவது விஷயம். அந்த குறிப்பிட்ட பிரிவில் அவர்கள் எவ்வளவு சீனியர் என்பது மற்றும் பணியில் அவர்களது சர்வீஸ் உள்ளிட்டவை முக்கியமான விஷயம்” என தெரிவித்த போது நாங்கள் கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு முறை கேட்கிறோம், நான்கு பேரின் பெயர்களை எப்படி நீங்கள் பரிந்துரையின் இறுதிக் கட்டத்திற்கு கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.
அதற்கு மீண்டும் பழைய பதிலையே தலைமை வழக்கறிஞர் தெரிவித்தபோது, ஆறு ஆண்டுகள் தங்களது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத நபர்களை, நீங்கள் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கிறீர்கள். இது பிரிவு 6-ஐ மீறுவதாக இருக்கிறது என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தன் தரப்பு வாதங்களை நிறைவு செய்ததற்குப் பிறகு மனுதாரர்கள் சார்பில் பிரசாத் பூஷன் மற்றும் கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியாயமான சட்டத்தின் படி ஆறு ஆண்டுகள் என்பது இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது ஏன்?. இப்படி இருந்தால் இந்த அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக இயங்குகிறது என்பதை எப்படி நம்புவது என கேள்வி எழுப்பினர்.
இதனை சரி செய்வதற்கு தன்னிச்சையாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி தெளிவாக தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆறு ஆண்டுகள் பதவி காலம் என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு தீர்ப்பு தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
தேர்தல் அறக்கட்டளை மூலம் ரூ. 6,654 கோடி நன்கொடை பெற்ற பாரதிய ஜனதா கட்சி
22 Dec 2025டெல்லி, தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது. இதுதொடர்பான அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 130 பள்ளிக்குழந்தைகள் மீட்பு
22 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக ராணுவம் மீட்டது.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேசியாவில் விபத்து - 15 பேர் பலி
22 Dec 2025ஜகார்தா, இந்தோனேசியாவில் நடந்த பேருந்து விபத்தில் 15 பேர் பலியாயினர். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.
-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: ஜெலன்ஸ்கி கடும் குற்றச்சாட்டு
22 Dec 2025கீவ், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்ய படை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக குற்றச்சாட்டியுள்


