எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : அரசு வேலை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெறவும், கல்வி நிறுவனங்களில் சேரவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம். இதற்காக, பிறப்பு - இறப்பு பதிவு சட்டத் திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகிறது. இதன் மூலம் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து தரவு தளங்களையும் ஒன்றிணைக்க முடியும்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒன்றிய அரசு சில முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக பிறப்பு-இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-1969-ன் கீழ் ஏற்கனவே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகளில் பணி நியமனம், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் பெற இனி பிறப்புச் சான்றிதழ் சமர்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
பிறப்புச் சான்றிதழை கட்டாயமாக்கும் சட்டத்தை மேலும் வலுவாக்கி அதனை அரசின் ஆவணமாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு திருத்தம் செய்வதன் மூலம் பிறப்புச் சான்றிதழ் மூலம் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு, அடுத்தடுத்த காலகட்டத்தில் சம்பந்தப்பட்டவருக்கு சான்றிதழ்களை ஆன்லைனில் உடனடியாக வழங்க முடியும்.
உதாரணத்திற்கு 18 வயதாகும் போது சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதே நபர் இறந்து விட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தானியங்கி முறையில் எளிதாக நீக்கிவிட முடியும். இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றாலும் கூட, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் திருமணங்களைப் பதிவு செய்தல் போன்ற அடிப்படை சேவைகளைப் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக மேலும் சில விஷயங்களை முன்மொழிவு செய்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், வரும் 7-ம் தேதி தொடங்கும் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில், பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த வரைவு மசோதாவை கொண்டு வருவது தொடர்பாக கடந்த ஆண்டே மாநிலங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டன. அதன்படி மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டு, இச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைச் சேர்த்துள்ளோம்.
இந்த மசோதாவை சட்டமன்றத் துறை ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 17 அமர்வுகள் மட்டுமே இருப்பதால், மசோதா மீதான விவாதங்கள் அடுத்த அமர்வில் விவாதிக்க வாய்ப்புள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரல் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தரவுகள் பராமரிக்கப்படுகிறது. அவர்களின் மூலம், மக்கள்தொகைப் பதிவேடு, வாக்காளர் பதிவேடு, ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமத் தரவு தளங்களையும் புதுப்பிக்க முடியும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.
அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் சிவில் பதிவு மையம் மூலம் பிறப்பு - இறப்பு பதிவுகளை பதிவு செய்கின்றன. குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, கேரளா, கர்நாடகா, கோவா, அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சொந்தமாக பதிவு ஆவணங்களை பராமரிக்கின்றன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ போன்ற சில யூனியன் பிரதேசங்கள் ஒன்றிய அரசின் மூலம் பதிவுகளை செய்கின்றன. டெல்லி, லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்கள் தனியாக பதிவு செய்கின்றன. ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தங்கள் மூலம், அனைத்து தரவுத்தளங்களையும் ஒன்றிணைக்க முடியும். பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால், 2010-ல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை புதுப்பிக்கவும், 2015-ல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் திருத்தியமைக்கப்பட்ட தரவைப் புதுப்பிக்கவும் முடியும். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் ஏற்கனவே 119 கோடி மக்களின் தரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட்
17 Sep 2025உத்தரகாண்ட்: டேராடூன் நகருக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.