முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த வழக்கும் சாதாரணமானது அல்ல: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2022      இந்தியா
Chandrachud-2022 12 17

சுப்ரீம் கோர்ட்டிற்கு எந்த ஒரு வழக்கும் சாதாரணமானது, சிறியது என்பது இல்லை என்றும், தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்யாமல் இருப்பது தவறான நீதிக்கு வழிவகுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரையில் இந்த வழக்கு சிறிய வழக்கு, இந்த வழக்கு பெரிய வழக்கு என்று எந்த வழக்கும் கிடையாது. நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கும், சுதந்திரம் குறித்த கண்ணீருக்கும் பதில் அளிக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இது எதுவும் ஒருமுறை மட்டும் நடத்தப்படும் வழக்கு இல்லை. தனிமனித சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் நாங்கள் தலையிட்டு நிவாரணம் வழங்கவில்லை என்றால், இங்கே இருந்துகொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி பி.எஸ்.நரசிம்மாவுடன் இணைந்த அமர்வில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இக்ரம் என்பவருக்கு மின்சாரம் திருடியது தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை தொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "மின்சார திருட்டு வழக்கை கொலை வழக்காக மாற்ற முடியாது. நீதி மறுக்கப்படும்போது அதில் தலையீடு செய்யாமல் இருந்தால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 136 நீதிமன்றத்திற்கு வழங்கிய கடமையில் இருந்து அது தவறுவதாக அர்த்தமாகிவிடும்.

குடிமக்களின் உரிமையை பாதுகாக்க நீதிமன்றம் தலையிடுவது என்பது சட்டப்பிரிவு 136 வழங்கியுள்ள அரசியலமைப்பு உரிமையாகும். தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள விலைமதிப்பில்லாத, தவிர்க்க முடியாத உரிமையாகும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து