இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள 'இளைய ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தேனி : தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் - மல்லிகா தம்பதியின் மகன் ஜெயந்த்(35). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அருணாச்சல பிரதேசத்தில் திரான் பகுதியில் மேஜர்ஜெயந்த், லெப்டினன்ட் ரெட்டி ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர்.
ஜெயந்தின் உடல் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டது. அதை தொடர்ந்து ஜெயமங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு நேற்று பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நீண்டவரிசையில் அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கத்திற்கு அருகில் உள்ள இடத்தில் மேஜர் ஜெயந்தின் உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி, தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், சரவணக்குமார் எம்.எல்.ஏ, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெயந்த், மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தவர். அதனைதொடர்ந்து மதுரை தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் பயின்றார். கல்லூரி என்.சி.சியில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்தார். இதற்காக குடியரசு தினவிழாவில் பங்கேற்று பதக்கம் பெற்றார்.
ராணுவத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சேர்ந்த அவர், 2011-ம் ஆண்டு காஷ்மீரில் லெப்டினல் பதவியிலும், 2014-ல் குஜராத்தில் கேப்டன் பதவியிலும் இருந்தார். பைலட் பயிற்சியில் தேர்வு பெற்று 2018-ம் ஆண்டு ஸ்ரீநகரில் பைலட்டாகவும், 2021-ம் ஆண்டில் அசாமில் மிசோரி ராணுவ மையத்தில் மேஜராகவும் உயர்ந்தார்.
2019-ம் ஆண்டு திண்டுக்கல்லை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான செல்லாசாரதாஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவருடன் மிசோரி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள ராணுவ குடியிருப்பில் மேஜர் ஜெயந்தின் தந்தை வசித்து வருகிறார்.
மேஜர் ஜெயந்தின் தந்தை ஆறுமுகம் கூறுகையில், எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றினார். எனது சகோதரரும், ராணுவத்தில் பணியாற்றினார். அதே போல நானும் ராணுவத்தில் சேர முயன்றும் முடியவில்லை. இதனை தொடர்ந்து எனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்று சிறுவயது முதலே தெரிவித்து வந்தேன்.
அவரும் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இன்னும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இருந்தால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். இருந்த போதும் அவரது தற்போதைய சேவை வரை மனநிம்மதி அளிக்கிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளை கிழங்கு புட்டு![]() 2 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 5 days 5 hours ago |
குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்![]() 1 week 2 days ago |
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட்டில் நாளை விசாரணை
20 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கண்ணை நம்பாதே விமர்சனம்
20 Mar 2023இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரில்லர் படத்தின் இயக்குநர் மாறனின் மற்றொரு கிரைம் திரில்லர் படம் தான் கண்ணை நம்பாதே.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-20-03-2023.
20 Mar 2023 -
இம்ரானின் கட்சியை தடை செய்ய சட்ட ஆலோசனை : பாக். உள்துறை அமைச்சர் தகவல்
20 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரானின் கட்சியை தடை செய்ய விரைவில் சட்ட ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
செங்களம் பர்ஸ்ட் லுக் வெளீயீடு
20 Mar 2023செங்களம் எனும் இணைய தொடரின் பர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எஸ். ஆர்.
-
குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ரூ. ஆயிரம் உரிமை தொகை வழங்க அண்ணாமலை வலியுறுத்தல்
20 Mar 2023சென்னை : குடும்ப அட்டைதாரர்கள் 2.2 கோடி பேருக்கும் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
-
ஏப்ரல் 7-ல் வெளியாகிறது ஆகஸ்ட் 16, 1947
20 Mar 2023ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் ஆகஸ்ட் 16, 1947.
-
ஷூட் தி குருவி விமர்சனம்
20 Mar 2023மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள்.
-
80 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் அடைய வாய்ப்பு: அமைச்சர் கீதாஜீவன்
20 Mar 2023சென்னை : உரிமை தொகை திட்டத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பலனடைய வாய்ப்புள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
-
ராஜா மகள் விமர்சனம்
20 Mar 2023மகளின் ஆசையை நிறைவேற்ற படாத பாடும் ஒரு பாசத்தந்தையின் கதையே இந்த ராஜா மகள். செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ஆடுகளம் முருகதாஸ்.
-
கோஸ்டி விமர்சனம்
20 Mar 2023முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி.
-
அனைத்து பெண்களுக்கும் ரூ. ஆயிரம் தருவதுதானே தி.மு.க.வின் வாக்குறுதி : உரிமைத் தொகை குறித்து இ.பி.எஸ். விமர்சனம்
20 Mar 2023சென்னை : தி.மு.க.
-
கோபத்தில் இருந்தேன் - வரலட்சுமி
20 Mar 2023நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் கொன்றால் பாவம்.
-
டி3 விமர்சனம்
20 Mar 2023மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை.
-
கப்ஜா விமர்சனம்
20 Mar 2023விமானப்படை வீரரான உபேந்திரா சந்தர்ப்பவசத்தால் மிகப்பெரிய
-
தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு 144 கோடி ரூபாய் மானியம்: பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு
20 Mar 2023தமிழகத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் அளிப்பதற்காக வரும் நிதி ஆண்டில் ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நித
-
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் : பட்ஜெட் உரையில் அறிவிப்பு
20 Mar 2023சென்னை : சோழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில், தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்தார்.
-
சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை
20 Mar 2023கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.
-
குடிமகான் விமர்சனம்
20 Mar 2023தற்கால நொறுக்குத்தீனிகளின் ஆபத்துகளை உணர்த்தும் படம் இந்த குடிமகான். நாயகன் விஜய்சிவன் நொறுக்குத்தீனிகள் தின்றாலே போதையாகிவிடுவார்.
-
ஓய்வூதிய மசோதாவுக்கு எதிர்ப்பு: பிரான்சில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் குப்பைகள் தேக்கம்
20 Mar 2023பாரீஸ் : பிரான்சில் தூய்மை பணியாளர்கள் கடந்த சில தினங்களாக தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
-
ரஜினி மகள் வீட்டில் 60 சவரன் நகை மாயம் : போலீசார் தீவிர விசாரண
20 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: பட்ஜெட்டில் ரூ.22,562 கோடி ஒதுக்கீடு
20 Mar 2023மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
லண்டன் இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களால் தேசியக்கொடி அவமதிப்பு
20 Mar 2023லண்டன் : லண்டன் இந்திய தூதரகத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை கீழே இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியை பறக்க விட
-
வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து
20 Mar 2023சென்னை : தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
2022-ல் நடந்த தேர்தலை ரத்து செய்தது குவைத் நீதிமன்றம்
20 Mar 2023துபாய் : குவைத் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.