எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இ.பி.எஸ். பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், இ.பி.எஸ். தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. எனவே, பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப்பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான, வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு நேற்று (மார்ச் 22) விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களின் விவரம் வருமாறு., ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், விளக்கம் கேட்காமல், காரணம் கூறாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இது நியாமற்றது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்கள் திருத்த முடியாது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் அறிவிக்கவில்லை. தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?.
பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றமே முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பொதுக்குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஒருங்கிணைப்பாளரை நீக்கம் செய்ய கட்சியில் எந்த விதியும் இல்லை. பிற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பின்பற்றும் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்காகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது என எம்ஜிஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் நான் போட்டியிடத் தயார்; வழக்கையும் வாபஸ் பெறத் தயார்.. இவ்வாறு ஓ.பி.எஸ். தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்கள் அனைத்தும் நிறைவு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கியது முதலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் அடடுக்கடுக்காக வாதங்களை முன்வைத்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்க்கும், வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கோபி மஞ்சூரியன்![]() 2 days 12 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 6 days 11 hours ago |
முட்டை பக்கோடா![]() 1 week 2 days ago |
-
ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 வருட சிறை தண்டனை
02 Jun 2023பிரேசிலியா : பிரேசிலில் முன்னாள் அதிபர் பெர்னாண்டோ மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-06-2023.
02 Jun 2023 -
மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றி நீதியை பெற வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்
02 Jun 2023புதுடெல்லி, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம்.
-
கோகுல்ராஜ் கொலை வழக்கு: இதுவரை கடந்து வந்த பாதை
02 Jun 2023சென்னை, பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்
-
ஐபோன்களில் ரகசிய மென்பொருள்: உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றச்சாட்டு
02 Jun 2023மாஸ்கோ : ஐபோன்களில் ரகசிய மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக அமெரிக்கா மீது ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
மத்திய அரசின் அவசரச் சட்ட விவகாரம்: ஜார்கண்ட் முதல்வரை சந்தித்து பேசினார் அரவிந்த் கெஜ்ரிவால்
02 Jun 2023ராஞ்சி : டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்ககோரி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெ
-
மருத்துவமனையில் உள்ள மனைவியை காண சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் உத்தரவு
02 Jun 2023புதுடெல்லி, மருத்துவமனையில் உள்ள மனைவியை காண டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒருநாள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்
-
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. காட்டம்
02 Jun 2023மதுரை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருகிறார் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
ஊதிய உயர்வு பெற தேர்வு அவசியமில்லை: பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
02 Jun 2023சென்னை, 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீத
-
ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி: கூடுதலாக 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 2,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவி
-
கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
02 Jun 2023பானாஜி, கோவாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
-
பதற்றம் தணிந்ததால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்தி அறிவிப்பு
02 Jun 2023இம்பால், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு குடம் குடமாக நடந்த பாலாபிஷேகம்
02 Jun 2023மதுரை : வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடந்தது.
-
கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
02 Jun 2023சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
புதுச்சேரியில் திருமண தாம்பூலத்தில் மதுபாட்டில்: மணமகன் வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது காவல்துறை
02 Jun 2023புதுச்சேரி, புதுச்சேரியில் திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது புதுச்சேரி காவல்து
-
பூமியின் மேற்பரப்பில் இருந்து 32,000 அடி வரை துளையிடும் பணியை தொடங்கிய சீனா
02 Jun 2023பெய்ஜிங் : பூமியின் மேற்பரப்பில் இருந்து 10,000 மீட்டர் (32,808 அடி) வரை துளையிடும் பணியை சீன விஞ்ஞானிகள் தொடங்கியுள்ளனர்.
-
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
02 Jun 2023புதுடெல்லி, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
02 Jun 2023சென்னை : ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
-
கரூரில் 8-வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை
02 Jun 2023கரூர் : கரூரில் நேற்று 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
-
நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : கோபால கிருஷ்ண காந்தி புகழாரம்
02 Jun 2023சென்னை : நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னால் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
-
சேலம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 2 பேர் கைது: 3 பேர் மீது வழக்குப் பதிவு
02 Jun 2023சேலம், சேலம், சர்க்கார் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்துக்கு காரணமான 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள இரும்பாலை காவல்துற
-
தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் தாக்கம் உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
02 Jun 2023சென்னை, தமிழகம், புதுச்சேரியில் 2 நாள்களுக்கு இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
-
தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : பால்குடம் சுமந்து வந்து பக்தர்கள் அபிஷேகம்
02 Jun 2023சென்னை : அறுபடை வீடுகளிலும் முருகனின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகம் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
-
பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கனும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 Jun 2023சென்னை, தமிழகத்தில் சமீப காலமாக பட்டாசு ஆலை விபத்துக்கள் தினசரி செய்தியாகி வருகின்ற நிலையில் பட்டாசு ஆலைகளை தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதி
-
ஒடிசாவில் விபத்துகுள்ளானது கோரமண்டல் விரைவு ரெயில் : மீட்பு பணிகள் தீவிரம்
02 Jun 2023புவனேஷ்வர் : சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதை அடுத்து அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.