எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதனிடையே டிடிஎப் வாசன், கடந்த 3 நாட்களுக்கு முன் விலை உயர்ந்த தனது பைக்கில் சென்னையில் இருந்து மராட்டிய மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரம் பகுதியில் அதிவேகமாக சென்ற அவர், முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்று தனது பைக்கில் 'வீலீங்' செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் டிடிஎப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த டிடிஎப் வாசனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அருகில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட போதிலும் அவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவருக்கு கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காஞ்சிபுரம் பாலுசெட்டிசத்திரம் போலீசார், டிடிஎப் வாசன் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் நேற்று கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது டிடிஎப் வாசனை 15 நாட்கள் (அக்டோபர் 3-ம் தேதி வரை) நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். இதனை தொடந்து டிடிஎப் வாசன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 1 day 6 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 5 days 32 min ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 2 days ago |
-
பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
24 Sep 2023திருவனந்தபுரம் : பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் காலமானார். அவருக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
-
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதியுலா
24 Sep 2023திருப்பதி : திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சூரியபிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
-
சட்டவிரோத பணிகளை செய்ய விரும்பாததால் பதவி விலகிய ட்ரூடோவின் பாதுகாப்பு குழு அதிகாரி
24 Sep 2023டொரண்டோ : சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் கனடா பிரதமரின் பாதுகாப்புக் குழு பணியை ராஜினாமா செய்வதாக கார்போரல் புல்போர்ட் கூறியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட அதிபர் ஜோபைடன் : வெள்ளை மாளிகை தகவல்
24 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.
-
கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் இன்று முதல் மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட கலெக
-
சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது நல்ல முடிவு : இங்கிலாந்து பிரதமருக்கு டிரம்ப் பாராட்டு
24 Sep 2023வாஷிங்டன் : சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தளர்த்தியுள்ளது நல்ல முடிவு என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
-
2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9,000 கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டம்
24 Sep 2023திருவனந்தபுரம் : வரும் 2030-ம் ஆண்டுக்குள் ரூ. 9 ஆயிரம் கோடியில் சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
24 Sep 2023புதுடெல்லி : தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டம் : கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு அழைப்பு
24 Sep 2023பெங்களூரு : காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் நடந்ததை போன்று பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடக நீர் பாதுகாப்பு அமை
-
சென்னையில் இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
24 Sep 2023சென்னை : சென்னை இன்று அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
-
பள்ளி குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கும் ரஷ்யா : வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்
24 Sep 2023மாஸ்கோ : தன் நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு ரஷ்யா போர் பயிற்சி அளித்து வருவதாக வெளியான தகவலையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் ரஷ்யாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
-
சந்திராயனின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
24 Sep 2023பெங்களூரு : சந்திராயன் - 3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
-
சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி
24 Sep 2023பெலிட்வி : சோமாலியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 போலீசார் உட்பட 15 பேர் பலியானார்கள்.
-
நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணித்த கவர்னர் தமிழிசை
24 Sep 2023திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் கலந்து கொண்ட புதுவை கவர்னர் தமிழிசை அந்த ரயிலில் ஏறி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-24-09-2023
24 Sep 2023 -
தெலுங்கானாவில் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : மாநில தேர்தல் அதிகாரி தகவல்
24 Sep 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் அடுத்த 3 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் தெரிவித்தார்.
-
90 சதவீத வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
24 Sep 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
புறாக்களை பராமரிக்கும் பணி: சென்னை ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத்தில் பிரதமர் பாராட்டு
24 Sep 2023சென்னை : புறாக்களை பாதுகாத்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.&nbs
-
வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது : ராகுலுக்கு கம்யூனிஸ்டு எதிர்ப்பு
24 Sep 2023திருவனந்தபுரம் : வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
-
வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக்கூடாது : காங்கேயம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
24 Sep 2023திருப்பூர் : வாக்குறுதிகளை காப்பாற்றாத பா.ஜ.க.வை தமிழகத்தில் டெபாசிட் வாங்க விடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
24 Sep 2023சென்னை : 5,237 பேருக்கு கேங்மேன் பணி நியமன ஆணைகளை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் அக். 5 வரை நீட்டிப்பு
24 Sep 2023விஜயவாடா : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் : கவர்னர் தமிழிசை புகழாரம்
24 Sep 2023நெல்லை : நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நெல்லை சென்றிருந்தா
-
9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் : கர்நாடக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
24 Sep 2023பெங்களூரு : கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மையம் : விரைவில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2023சென்னை : பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மணி அழைப்பு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளார்.