எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை, : தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக மேலும் வளர்ச்சி பெறவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதே போல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப் பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம், ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதே போல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும். கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.
புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும்.
இதனைத் தவிர்க்க, காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வர வேண்டும்.
இதுதவிர, முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும். நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல்பூர்வமாக காவல் துறை செயல்பட வேண்டும். அடுத்து, பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
இத்தகைய குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.
போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதே போல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள், வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைபொருட்கள் கடத்தலைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் ஆளிநர்கள் முதல் காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரும் கடமை மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் அவர்களின் பணியில் ஈடுபட்டு, சரியான நுண்ணறிவு தகவல்களைப் பெற்று, எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.
நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 12 hours 27 sec ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 3 days 15 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 10 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 02-12-2023.
02 Dec 2023 -
புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
02 Dec 2023சென்னை : புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
-
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி
02 Dec 2023தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
02 Dec 2023திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
02 Dec 2023புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச.
-
வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்
02 Dec 2023கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்
-
சிக்கலில் மைக் டைசன்
02 Dec 2023பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்
02 Dec 2023சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்
02 Dec 2023திண்டுக்கல் : அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
-
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை, இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இளம் வாக்காளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: விவேக் ராமசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு
02 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
அயோத்தியில் வரும் 15-ம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்: உ.பி முதல்வர் யோகி தகவல்
02 Dec 2023அயோத்தி, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகி விடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்
-
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி
02 Dec 2023சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் : நீலகிரியில் அமைச்சர் உதயநிதி பேச்சு
02 Dec 2023உதகை : பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் என்று தெரிவித்துள்ள, திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரச
-
விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி
02 Dec 2023சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்
-
மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை
02 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிக
-
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
02 Dec 2023பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு
02 Dec 2023மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத
-
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
02 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4.16 லட்சம் கோடியை எட்டும் : ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிம மதிப்பு
02 Dec 2023மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல்.
-
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு
02 Dec 2023புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி : ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி
02 Dec 2023மும்பை : உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருத
-
தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை : மாவட்டசெயலாளர் சுரேஸ் பங்கேற்பு.
02 Dec 2023கோவில்பட்டி : தமிழ் திரைப்படஉலகில் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக திரைஉலகில் தன்னுடன் இருப்பவர்களுக்கு உதவிசெய்பவர் என்று சொன்னால் அது நடிகர் விஜயகாந்தையே சாரும்.
-
புதுவையில் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு
02 Dec 2023புதுவை : புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் நாளை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.